» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வெள்ளமோடி பகுதியில் ரூ.1.60 கோடி மதிப்பில் தார்சாலை பணிகள் தொடக்கம்!
திங்கள் 15, ஜூலை 2024 4:38:01 PM (IST)

வெள்ளிச்சந்தை தேர்வுநிலை பேரூராட்சி வெள்ளமோடி பகுதியில் ரூ.1.60 கோடி மதிப்பில் தார்சாலை பணிகளை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட வெள்ளமோடி பகுதியில் மாவட்ட நெடுஞ்சாலை துறையின் சார்பில் சீரமைக்கப்படவுள்ள தார்சாலை பணியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் முன்னிலையில் இன்று (15.07.2024) துவக்கி வைத்து தெரிவிக்கையில் "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள்மற்றும் ஊராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை அறிவித்தும் அதற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் விரிவான சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம் 2021-2022 திட்டத்தின் கீழ் ரூ.1.60 கோடி மதிப்பில் வெள்ளிசந்தை தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பேயோடு முதல் வெள்ளமோடி (சாந்தபுரம் சாலை) வரை 3.2 கிலோ மீட்டர் நீளத்தில் சாலை சீரமைக்கும் பணியினை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இச்சாலை தரமானதாக இருக்கவும், விரைந்து பணியினை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், தெரிவித்தார்கள்.
நிகழ்ச்சியில் பொதுப்பணி நெடுஞ்சாலை துறை செயற்பொறியாளர் பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் விஜயா, உதவி பொறியாளர் ரெஜ்வின், வழக்கறிஞர் சிவராஜ், அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் மரணம் : போலீஸ் விசாரணை!
சனி 13, செப்டம்பர் 2025 5:46:58 PM (IST)

ரயிலில் கார்களை கொண்டு செல்ல சேவை தொடங்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
சனி 13, செப்டம்பர் 2025 4:19:08 PM (IST)

மருந்தகம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்: ஆய்வாளர் கைது
சனி 13, செப்டம்பர் 2025 11:44:13 AM (IST)

நாகர்கோவிலில் கஞ்சா விற்பனை செய்த 3பேர் கைது: 1½ கிலோ கஞ்சா, கார், பைக் பறிமுதல்!
சனி 13, செப்டம்பர் 2025 10:15:16 AM (IST)

செப்.18ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:11:44 PM (IST)

பச்சிளம் குழந்தையின் வாயில் டிஸ்யூ பேப்பரை திணித்து கொலை செய்த கொடூர தாய் கைது!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 4:52:08 PM (IST)
