» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் பெண் போலீசிடம் அத்துமீறல்; 2 வாலிபர்கள் அதிரடி கைது

புதன் 6, டிசம்பர் 2023 8:23:13 AM (IST)

நாகர்கோவிலில் பெண் போலீசிடம் அத்துமீறிய 2 வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

நாகர்கோவில் கோட்டார் சவேரியார் ஆலய திருவிழாவையொட்டி நேற்றுமுன்தினம் ஏராளமான போலீசார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த வகையில் புதுக்கடை காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவர் செட்டிகுளம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது செட்டிகுளம் கணபதி நகரை சேர்ந்த பிரதீஷ் (வயது 30), திங்கள்நகரை சேர்ந்த பிராங்கிளின் (29) ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

அந்த சமயத்தில் பெண் போலீஸ் இருவரையும் தடுத்து நிறுத்தியதோடு திருவிழாவையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது, இந்த வழியாக செல்லக்கூடாது என கூறியுள்ளார். இதனால் பெண் போலீசிடம் வாலிபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த இருவரும், பெண் போலீசிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் போலீஸ் கோட்டார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பிரதீஷ், பிராங்கிளின் ஆகிய 2 பேர் மீது போலீசிடம் அத்துமீறுதல், அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory