» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு: பிரதமர் மோடியிடம் உறுதி அளித்த புதின்
திங்கள் 5, மே 2025 5:06:52 PM (IST)
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக, பிரதமர் மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

மேலும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனக்கூறிய புதின், இந்தியா எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளர்.
மேலும் இந்தியா - ரஷியா உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடியும் புதினும் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ரஷியா- இந்தியா இடையேயான வருடந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பும் விடுத்துள்ளார். இந்த தகவலை மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இதற்கு பங்களிக்க வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்த நிலையில், ரஷிய அதிபர் புதின், பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரானின் அணு நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டது: டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்
புதன் 25, ஜூன் 2025 4:47:12 PM (IST)

விமான படை தளம் மீது ஈரான் தாக்குதல்: தூதரை அழைத்து கத்தார் கடும் கண்டனம்!
புதன் 25, ஜூன் 2025 12:14:19 PM (IST)

கிரீஸ் தீவில் 3வது நாளாக காட்டுத்தீ பற்றி எரிகிறது : தீயணைப்புப் பணிகள் தீவிரம்!
செவ்வாய் 24, ஜூன் 2025 4:25:13 PM (IST)

இஸ்ரேல் - ஈரான் இடையே முழு அளவில் போர் நிறுத்தம் : டிரம்ப் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு!
செவ்வாய் 24, ஜூன் 2025 12:33:34 PM (IST)

அமைதிக்கான நோபல் பரிசை டிரம்ப் மறந்து விட வேண்டியதுதான் : ரஷிய முன்னாள் அதிபர்
திங்கள் 23, ஜூன் 2025 5:51:04 PM (IST)

ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல் கடுமையான உரிமை மீறல்: வட கொரியா கண்டனம்!
திங்கள் 23, ஜூன் 2025 11:32:50 AM (IST)
