» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கையை உடைக்க முயற்சி: ராகுலை கண்டித்து 272 பிரமுகர்கள் கடிதம்!

வியாழன் 20, நவம்பர் 2025 10:32:13 AM (IST)

தேர்​தல் ஆணை​யம் மீதான நம்​பிக்​கையை உடைக்க காங்​கிரஸ் கட்சி முயற்​சிப்​ப​தாக ஓய்​வு​பெற்ற நீதிப​தி​கள், உயர் அதி​காரி​கள் உள்​ளிட்ட 272 முக்​கிய பிர​முகர்​கள் குற்றம்சாட்டி உள்​ளனர்.

ஓய்​வு​பெற்ற 16 நீதிப​தி​கள், 123 அரசு உயர் அதி​காரி​கள், 133 ராணுவ உயர் அதி​காரி​கள் உள்​ளிட்ட 272 முக்​கிய பிர​முகர்​கள் 'தேசிய அரசி​யல் சாசன அமைப்​பு​கள் மீதான தாக்​குதல்' என்ற தலைப்​பில் திறந்த மடல் எழுதி உள்​ளனர். அதில் கூறி​யிருப்​ப​தாவது: சில அரசி​யல் தலை​வர்​கள், நேர்​மை​யான மாற்று கொள்​கைகளை முன்​வைப்​ப​தற்கு பதில், ஆதா​ரமற்ற குற்​றச்​சாட்​டு​களை முன்​வைத்து அரசி​யல் நாடகம் நடத்​துகிறார்​கள். அவர்​கள் இந்​திய பாது​காப்​புப் படை​யினரின் வீரத்​தை​யும் சாதனை​களை​யும் சந்​தேகிக்​கின்​றனர்.

நீதித் துறை​யின் செயல்​பாட்​டை​யும் சந்​தேகிக்​கின்​றனர். நாடாளு​மன்​றத்​தை​யும் அதன் அதி​காரி​களை​யும் குறை கூறுகின்​றனர். இப்​போது அதேமுறை​யில் இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தின் நேர்மை கண்ணி​யத்​தின் மீது குறை கூறுகிறார்​கள்.

குறிப்​பாக, வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்ஐஆர்) என்ற பெயரில் தேர்​தல் ஆணை​யம் தொடர்ந்து வாக்குகளை திருடு​வ​தாக காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி குற்​றம்​சாட்டி வரு​கிறார். தேர்​தல் ஆணை​யத்​துக்கு எதிராக 100% ஆதா​ரம் இருக்​கிறது என்​றும் ஹைட்​ரஜன் குண்டு இருக்​கிறது என்​றும் அவர் தெரி​வித்​தார். ஆனால், அதற்கு உரிய ஆதா​ரங்​களை அவர் வழங்​க​வில்​லை.

காங்​கிரஸ் கட்​சி​யின் பிற தலை​வர்​கள், பிற எதிர்க்​கட்​சித் தலைவர்​கள், சில தன்​னார்வு தொண்டு நிறு​வனங்​கள் உள்ளிட்டவை​யும் இதே மாதிரி​யான குற்​றச்​சாட்​டு​களை முன்வைக்​கின்​றன. ஆனால் இவை அனைத்​தும் அடிப்​படை ஆதாரமற்ற குற்​றச்​சாட்​டு​கள் என ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது.

தேர்​தல் ஆணை​யம் எஸ்​ஐஆர் நடை​முறையை வெளிப்​படை​யாக தெரி​வித்​துள்​ளது. இதன்​மூலம் நீதி​மன்ற உத்​தர​வின்​படி இந்த பணி நடை​பெறு​வது தெரி​கிறது. தகு​தி​யற்ற பெயர்​கள் பட்டியலில் இருந்து நீக்​கப்​பட்​டு, தகு​தி​யுடைய வாக்​காளர்​கள் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்.

தொடர்ந்து தேர்​தலில் தோல்வி அடை​யும் அரசி​யல் கட்​சிகள் விரக்​தி​யடைந்து இது​போன்ற குற்​றச்​சாட்​டு​களை கூறி வருகின்றன. தேர்​தல் ஆணை​யம் தனது வெளிப்​படைத் ​தன்மையை தொடர வேண்​டும். அதே​நேரம், அரசி​யல் சாசன அமைப்​பு​களின் செயல்​முறையை அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் மதிக்க வேண்​டும். ஆதா​ரமற்ற குற்​றச்​சாட்​டு​களை முன்​வைக்​கக் கூடாது. ஜனநாயக தீர்ப்பை ஏற்​க வேண்​டும்​. இவ்வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory