» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜப்பானின் பெயரை மாற்ற யோகி சென்றிருக்கிறார்: அகிலேஷ் யாதவ் கிண்டல்!
வியாழன் 26, பிப்ரவரி 2026 5:35:28 PM (IST)

உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் வெளிநாட்டுப் பயணம் குறித்து, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கிண்டலாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 3 நாள் அரசுமுறைப் பயணமாகச் சிங்கப்பூர் சென்றார். அங்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
பொருளாதார ஒத்துழைப்பு, டிஜிட்டல் மயமாக்கல், திறன் மேம்பாடு மற்றும் நவீன உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பின் மூலம் உத்தர பிரதேசத்தில் முதலீடு செய்ய ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளதாகவும், அதில் ரூ. 60 ஆயிரம் கோடி அளவுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்தாகியுள்ளதாகவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். மாநிலத்தின் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய இது ஒரு மைல்கல்லாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார். சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு அவர் நேற்று ஜப்பான் சென்றடைந்தார்.
அகிலேஷ் யாதவின் கிண்டல்
முதலமைச்சர் யோகியின் ஜப்பான் பயணம் குறித்து லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ் கூறியதாவது: "சிலர் ஜப்பானுக்குச் சென்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகின்றனர். ஜப்பானை 'நிப்பான்' என்றும் அழைப்பார்கள். பெயர் மாற்றம் செய்வதில் வல்லவரான ஒரு முதலமைச்சர் நம் நாட்டிலிருந்து வந்திருக்கிறார் என்பதற்காக ஜப்பான் மக்கள் அச்சப்பட மாட்டார்கள் என நம்புகிறேன்."
மேலும், உத்தர பிரதேசத்தில் பல்வேறு நகரங்களின் பெயர்கள் மாற்றப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், "யோகி ஆதித்யநாத் ஜப்பானை 'ஆதித்யாபூர்' அல்லது 'ஆதித்யாபுரம்' எனப் பெயர் மாற்றிவிடுவார். அப்படி இல்லையென்றால் அவர் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்ப மாட்டார் என நம்புகிறேன்" என்று கிண்டலாகத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.42 உயர்வு: சென்னையில் ரூ.3,283 ஆக நிர்ணயம்!
திங்கள் 1, ஜூன் 2026 5:46:26 PM (IST)

உச்ச நீதிமன்றத்திற்கு வி. மோகனா உள்பட 5 புதிய நீதிபதிகள் நியமனம் - மத்திய அரசு உத்தரவு!
திங்கள் 1, ஜூன் 2026 12:44:55 PM (IST)

டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - பலி 6 ஆக அதிகரிப்பு, மீட்புப் பணி தீவிரம்!
ஞாயிறு 31, மே 2026 8:45:18 PM (IST)

பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி திட்டம்: தயாரிப்பு செலவை குறைக்க அதிரடி நடவடிக்கை!
சனி 30, மே 2026 11:09:24 AM (IST)

மராட்டியத்தில் விஷச் சாராயம் குடித்த 14 பேர் பரிதாப பலி - 5 பேர் கவலைக்கிடம்: 8 பேர் கைது!
சனி 30, மே 2026 8:57:44 AM (IST)

கேரள சட்டப்பேரவையில் வந்தே மாதரம் பாடாததால் சர்ச்சை: ஆளுநர் அதிருப்தி!
வெள்ளி 29, மே 2026 3:46:47 PM (IST)


