» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நீதித்துறையில் ஊழல் குறித்த சர்ச்சை பாடம்: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்; மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி!
வியாழன் 26, பிப்ரவரி 2026 4:52:28 PM (IST)

8-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இந்திய நீதித்துறையில் ஊழல் நிலவுவதாகக் குறிப்பிட்டிருந்த சர்ச்சைக்குரிய பாடத்திற்காக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (NCERT) நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது.
மத்திய அரசின் NCERT வெளியிட்ட 8-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில், இந்திய நீதித்துறை குறித்து அவதூறு பரப்பும் வகையில் சில பகுதிகள் இடம் பெற்றிருந்தன. இதனைத் தானாக முன்வந்து கவனித்தில் கொண்ட உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த்: "இந்திய உச்ச நீதிமன்றத்தின் மீதும், நீதித்துறையின் மீதும் அவதூறு பரப்ப யாரையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். கல்வி நிறுவனங்கள் இத்தகைய தவறான தகவல்களைப் பரப்புவது ஏற்கத்தக்கதல்ல," எனத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
என்.சி.இ.ஆர்.டி விளக்கம்
நீதிமன்றத்தின் கண்டனத்தைத் தொடர்ந்து, என்.சி.இ.ஆர்.டி நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக் கடிதம் வழங்கியது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எதிர்பாராத தவறு: 8-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்துத் தவறான தகவல்கள் இடம்பெற்றது எதிர்பாராமல் நடந்த ஒரு பிழையாகும். இதற்காக நாங்கள் வருத்தம் தெரிவிப்பதோடு, மன்னிப்பும் கோருகிறோம்.
இந்திய நீதித்துறையை நாங்கள் மிகுந்த மரியாதையுடன் போற்றுகிறோம். பாடம் நீக்கம்: சர்ச்சைக்குரிய அந்தப் பாடப்பகுதி உடனடியாக முழுமையாக நீக்கப்படும். வரும் புதிய கல்வி ஆண்டிற்குள் (2026-27) திருத்தப்பட்ட புதிய பாடப்பகுதிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும். கல்விப் பாடத்திட்டங்களில் இதுபோன்ற தவறுகள் நேர்வது எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆட்டோ டெபிட் வரம்பு ரூ.15 ஆயிரமாக உயர்வு : இனி ஓடிபி தேவையில்லை - ஆர்பிஐ அறிவிப்பு!
புதன் 22, ஏப்ரல் 2026 5:51:36 PM (IST)

திருச்சூர் வெடி விபத்தில் 13 பேர் உயிரிழப்பு : விசாரணை ஆணையம் அமைத்தது கேரள அரசு!
புதன் 22, ஏப்ரல் 2026 5:25:16 PM (IST)

பயங்கரவாதத்திற்கு இந்தியா அடிபணியாது: பஹல்காம் தாக்குதல் நினைவு நாளில் பிரதமர் அஞ்சலி
புதன் 22, ஏப்ரல் 2026 12:50:25 PM (IST)

டெல்லியில் போலி ஈனோ, நெஸ்கஃபே தயாரித்த கும்பல் கைது: 1.5 லட்சம் பாக்கெட்டுகள் பறிமுதல்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:15:54 PM (IST)

தேங்கி நிற்கும் பயங்கரவாத வழக்குகள்: விரைவு நீதிமன்றங்கள் அமைக்க உச்சநீதிமன்றம் நடவடிக்கை
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:33:31 PM (IST)

ராஜஸ்தான் சுத்திகரிப்பு ஆலையில் தீவிபத்து : பிரதமரின் திறப்பு விழா ஒத்தி வைப்பு!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 10:27:48 AM (IST)

