» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ராஜஸ்தான் சுத்திகரிப்பு ஆலையில் தீவிபத்து : பிரதமரின் திறப்பு விழா ஒத்தி வைப்பு!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 10:27:48 AM (IST)

ராஜஸ்தானில் நாளை பிரதமர் திறந்து வைக்க உள்ள நிலையில், சுத்திகரிப்பு ஆலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்கான திட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
ராஜஸ்தானின் பலூத்ரா நகரில் பச்பத்ரா பகுதியில் இந்தியாவின் முதல் பசுமைவெளி ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு ஆலை ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. ராஜஸ்தான் அரசுடன் இணைந்து, இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் இதனை செயல்படுத்த உள்ளது. பிரதமர் மோடி இதனை நாளை துவக்கி வைக்க இருந்த நிலையில், திடீரென தீவிபத்து ஏற்பட்டு கரும்புகை கிளம்பியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த கரும்புகை வான் வரை பரவியது. எனினும், அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு, அதனை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இறக்குமதியை சார்ந்திராமல் உள்நாட்டு உற்பத்தி திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆலை அமைக்கப்பட்டு உள்ளது. இது, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், இந்த சுத்திகரிப்பு ஆலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்கான திட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெல்லியில் சிஜேபி போராட்டம் தீவிரம்: தர்மேந்திர பிரதானுடன் அமித் ஷா அவசர ஆலோசனை!
திங்கள் 20, ஜூலை 2026 5:10:43 PM (IST)

நீட், ராமர் கோவில் விவகாரங்களால் கடும் அமளி : நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!
திங்கள் 20, ஜூலை 2026 4:23:28 PM (IST)

இஸ்ரோவில் இருந்து 1,000 விஞ்ஞானிகள் திடீர் விலகல்: குலசேகரப்பட்டினம் ஏவுதள திட்டம் பாதிப்பு?
திங்கள் 20, ஜூலை 2026 11:22:25 AM (IST)

வந்தே மாதரம் பாடலுக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டுகள் சிறை! புதிய மசோதா தாக்கலாகிறது!
ஞாயிறு 19, ஜூலை 2026 1:30:06 PM (IST)

தனியார் பங்களிப்புடன் விண்வெளி ஆய்வு: சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய விக்ரம்-1!
சனி 18, ஜூலை 2026 4:06:16 PM (IST)

21-வது நாள் நாளாக உண்ணாவிரதப் போராட்டம் : சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி!
சனி 18, ஜூலை 2026 12:40:37 PM (IST)


