» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி; ராகுல் காந்தி உட்பட கூட்டணி எம்.பிக்கள் கைது!
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 5:26:07 PM (IST)

வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட கூட்டணி எம்.பி.க்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் உள்ள மகர் துவாரிலிருந்து நிர்வாச்சன் சதனில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குப் பேரணியாக சென்றனர். இப்பேரணியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் எம்.பி மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.
அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து செல்லும்போது, காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டனர். போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளதால், இண்டியா கூட்டணி மூத்த தலைவர்களான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் மற்றும் என்சிபி தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தை தொடர்கின்றனர்.
இன்று நடந்த பேரணியின் போது திரிணமூல் எம்.பி மிதாலி பாக் மயக்கமடைந்தார். பேரணியின் போது பேசிய காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், "தேர்தல் ஆணையத்திடம் எங்கள் கோரிக்கையை மிகவும் தெளிவாக முன்வைக்கிறோம். நாங்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு அமைதியான பேரணியை நடத்தி வருகிறோம்.
பிஹார் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் ஒரு குறிப்பாணையை வழங்க விரும்புகிறோம். இப்போது தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு செல்வதற்கு கூட எங்களுக்கு அனுமதி இல்லை. நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்னால், ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது” என்று கூறினார்.
மக்கள் கருத்து
srinivasanAug 14, 2025 - 08:39:03 AM | Posted IP 172.7*****
ivan oru lusu.indian people never belive his words.because he is not a indian.
மேலும் தொடரும் செய்திகள்

தெருநாய்களை காப்பகத்துக்கு அனுப்ப தடை : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 11:25:38 AM (IST)

ஜிஎஸ்டியில் 12 மற்றும் 28 சதவீத வரி விகிதங்களை நீக்க நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல்
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 5:39:23 PM (IST)

பொய் வழக்குகள்: வக்கீலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 10:56:38 AM (IST)

டெல்லி முதல்-அமைச்சர் மீது தாக்குதல்: கைதான வாலிபருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 10:45:20 AM (IST)

முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா தாக்கல் : கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!
புதன் 20, ஆகஸ்ட் 2025 4:19:17 PM (IST)

துணை ஜனாதிபதி தேர்தல்: பிரதமர் முன்னிலையில் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!
புதன் 20, ஆகஸ்ட் 2025 3:37:11 PM (IST)

srinivasanAug 14, 2025 - 08:40:44 AM | Posted IP 162.1*****