» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டிசிஎஸ் நிறுவனத்தில் 12ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்க விவகாரம்: கர்நாடக அரசு நோட்டீஸ்!
சனி 2, ஆகஸ்ட் 2025 3:19:47 PM (IST)

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தில் 12,000 ஊழியர்கள் பணி நீக்க விவகாரம் தொடர்பாக அந்த நிறுவனத்துக்கு கர்நாடக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம் 2026-ம் நிதியாண்டில் தங்களது நிறுவனத்தில் 2 சதவீத பணியாளர்களை குறைக்க முடிவெடுத்துள்ளது. இதன் விளைவாக 12 ஆயிரத்து 200 ஊழியர்கள் வேலை இழக்க நேரிடும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் கூறும்போது, "டிசிஎஸ் நிறுவனத்தின் திடீர் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. 12 ஆயிரம் ஊழியர்கள் என்பது மிகவும் பெரிய எண்ணிக்கை. இதனை தடுத்து நிறுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன்.
தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், டிசிஎஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதுதவிர, அந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். தொழிலாளர் நல சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க.வின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்!
வெள்ளி 7, நவம்பர் 2025 11:56:11 AM (IST)

காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி டிசம்பர் 2-ம்தேதி தொடங்குகிறது: தர்மேந்திர பிரதான் தகவல்
வியாழன் 6, நவம்பர் 2025 3:58:42 PM (IST)

எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரயில்: 8-ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:33:53 AM (IST)

அரியானா வாக்காளர் பட்டியலில் புகைப்படம் : பிரேசில் மாடல் அழகி அதிர்ச்சி!
வியாழன் 6, நவம்பர் 2025 11:25:12 AM (IST)

உத்தரபிரதேசத்தில் தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி 6 பெண் பக்தர்கள் பலி!
வியாழன் 6, நவம்பர் 2025 8:38:12 AM (IST)

தொழிலதிபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று மகன் தற்கொலை: குடிபோதையில் வெறிச்செயல்!
புதன் 5, நவம்பர் 2025 12:15:26 PM (IST)


.gif)