» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மாத சம்பளம் ரூ.15ஆயிரத்தில் ரூ.72 கோடி சொத்துகள் குவிப்பு : லோக்அயுக்தா விசாரணை
சனி 2, ஆகஸ்ட் 2025 12:52:07 PM (IST)
கர்நாடகாவில் ரூ.15ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒப்பந்த ஊழியர் ரூ.72 கோடிக்கும் அதிகமான சொத்துகள் குவித்தது குறித்து லோக்அயுக்தா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகாவில் அரசு அதிகாரிகள் முறைகேடாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இந்தநிலையில், கொப்பல் மாவட்டத்தில் கர்நாடக கிராமப்புற அடிப்படை வசதிகள் வளர்ச்சி துறையில் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலி ஊழியராக பணியாற்றி வருபவர் கலகப்பா நிடகுந்தி. இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக தான் அரசு துறையில் ஒப்பந்த ஊழியராக வேலைக்கு சேர்ந்தார்.
கலகப்பாவுக்கு பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் இருப்பதாகவும், அவர் சட்டவிரோதமாக அதனை சம்பாதித்து இருப்பதாகவும் லோக் அயுக்தா போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, கொப்பல் மாவட்டத்தில் பிரகதிநகரில் உள்ள கலகப்பாவுக்கு சொந்தமான வீடுகளில் லோக் அயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது லோக் அயுக்தா போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர். அதாவது அவரது வீட்டில் 350 கிராம் தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் கலகப்பா, அவரது மனைவி பெயர்களில் 24 வீடுகளும், 40 ஏக்கருக்கு விவசாய நிலமும், 4 வீட்டுமனைகள் இருப்பதும் தெரியவந்தது. இதுதவிர அவர் தனது வங்கி கணக்குகளில் பல லட்சம் ரூபாய் சேமித்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் அவரது தம்பி பெயரிலும் சில வீட்டுமனைகளை கலகப்பா வைத்திருப்பதற்கான சொத்து ஆவணங்களும் போலீசாரிடம் சிக்கியது.
அந்த சொத்து ஆவணங்களை போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றனர். கலகப்பா, அவரது மனைவி பெயரில் ஒட்டு மொத்தமாக ரூ.72 கோடிக்கு சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது. தினக்கூலி ஒப்பந்த ஊழியரிடம் இவ்வளவு சொத்துகள் இருப்பது போலீசாருக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, கலகப்பா மீது கொப்பல் லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெருநாய்களை காப்பகத்துக்கு அனுப்ப தடை : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 11:25:38 AM (IST)

ஜிஎஸ்டியில் 12 மற்றும் 28 சதவீத வரி விகிதங்களை நீக்க நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல்
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 5:39:23 PM (IST)

பொய் வழக்குகள்: வக்கீலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 10:56:38 AM (IST)

டெல்லி முதல்-அமைச்சர் மீது தாக்குதல்: கைதான வாலிபருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 10:45:20 AM (IST)

முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா தாக்கல் : கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!
புதன் 20, ஆகஸ்ட் 2025 4:19:17 PM (IST)

துணை ஜனாதிபதி தேர்தல்: பிரதமர் முன்னிலையில் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!
புதன் 20, ஆகஸ்ட் 2025 3:37:11 PM (IST)
