» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ராணுவ முகாமில் சக வீரர்கள் 29 பேரின் செல்போன்கள் திருடிய ராணுவ வீரர் கைது
திங்கள் 21, ஜூலை 2025 12:29:55 PM (IST)
மும்பை ராணுவ முகாமில் சக வீரர்கள் 29 பேரின் செல்போன்களை திருடிய ராணுவ வீரர் கோவையில் கைது செய்யப்பட்டார்.
மும்பை கொலபாவில் உள்ள ராணுவ படை பிரிவில் கடந்த மாதம் ராணுவ வீரர்களின் 29 செல்போன்கள் மாயமாகின. இது குறித்து கப்பரேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, மாயமான ஒரு செல்போன் தமிழ்நாட்டில் உள்ள கோவையில் சுவிட்ச்-ஆன் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் செல்போனை பயன்படுத்திய அல்பா துய்பாங் (24) என்பவரை பிடித்து கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட அல்பா துய்பாங் ராணுவ வீரர் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. மிசோரமை சேர்ந்த இவர், 4 ஆண்டுகளுக்கு முன் ராணுவத்தில் சேர்ந்தார். இவர் மும்பை கொலபா ராணுவ முகாமில் பணியில் இருந்தபோது சக வீரர்களின் செல்போன்களை திருடிவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.
போலீசார் அவரிடம் இருந்து 20 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அவர் திருடி சென்ற செல்போன்களை விற்பனை செய்ய இருந்ததாக போலீசார் கூறினர். ராணுவ வீரர் அல்பா துய்பாங்கை கப்பரேடு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெருநாய்களை காப்பகத்துக்கு அனுப்ப தடை : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 11:25:38 AM (IST)

ஜிஎஸ்டியில் 12 மற்றும் 28 சதவீத வரி விகிதங்களை நீக்க நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல்
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 5:39:23 PM (IST)

பொய் வழக்குகள்: வக்கீலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 10:56:38 AM (IST)

டெல்லி முதல்-அமைச்சர் மீது தாக்குதல்: கைதான வாலிபருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 10:45:20 AM (IST)

முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா தாக்கல் : கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!
புதன் 20, ஆகஸ்ட் 2025 4:19:17 PM (IST)

துணை ஜனாதிபதி தேர்தல்: பிரதமர் முன்னிலையில் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!
புதன் 20, ஆகஸ்ட் 2025 3:37:11 PM (IST)
