» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ராணுவ முகாமில் சக வீரர்கள் 29 பேரின் செல்போன்கள் திருடிய ராணுவ வீரர் கைது
திங்கள் 21, ஜூலை 2025 12:29:55 PM (IST)
மும்பை ராணுவ முகாமில் சக வீரர்கள் 29 பேரின் செல்போன்களை திருடிய ராணுவ வீரர் கோவையில் கைது செய்யப்பட்டார்.
மும்பை கொலபாவில் உள்ள ராணுவ படை பிரிவில் கடந்த மாதம் ராணுவ வீரர்களின் 29 செல்போன்கள் மாயமாகின. இது குறித்து கப்பரேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, மாயமான ஒரு செல்போன் தமிழ்நாட்டில் உள்ள கோவையில் சுவிட்ச்-ஆன் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் செல்போனை பயன்படுத்திய அல்பா துய்பாங் (24) என்பவரை பிடித்து கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட அல்பா துய்பாங் ராணுவ வீரர் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. மிசோரமை சேர்ந்த இவர், 4 ஆண்டுகளுக்கு முன் ராணுவத்தில் சேர்ந்தார். இவர் மும்பை கொலபா ராணுவ முகாமில் பணியில் இருந்தபோது சக வீரர்களின் செல்போன்களை திருடிவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.
போலீசார் அவரிடம் இருந்து 20 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அவர் திருடி சென்ற செல்போன்களை விற்பனை செய்ய இருந்ததாக போலீசார் கூறினர். ராணுவ வீரர் அல்பா துய்பாங்கை கப்பரேடு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் வழக்கு: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்ற கேள்வி
செவ்வாய் 14, அக்டோபர் 2025 5:38:15 PM (IST)

ஹரியானாவில் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை எதிரொலி: டிஜிபிக்கு கட்டாய விடுப்பு
செவ்வாய் 14, அக்டோபர் 2025 4:17:00 PM (IST)

பிரதமர் மோடியுடன் கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் சந்திப்பு!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:40:03 PM (IST)

வருவாய் குறைந்ததால் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி விருப்பம்!
திங்கள் 13, அக்டோபர் 2025 4:43:41 PM (IST)

கரூரில் 41 உயிரிழந்த உயிரிழந்த வழக்கில் சிபிஐ விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
திங்கள் 13, அக்டோபர் 2025 11:20:37 AM (IST)

தமிழகம், கேரளம் உட்பட 10 மாநிலத்தில் பணியாற்ற பெண்கள் விருப்பம்: ஆய்வில் தகவல்
சனி 11, அக்டோபர் 2025 4:49:09 PM (IST)
