» சினிமா » செய்திகள்
இரண்டாவது திருமணம் செய்து மோசடி: பிரபல சின்னத்திரை நடிகை மீது மோசடி புகார்!
திங்கள் 16, ஜூன் 2025 5:44:50 PM (IST)
முதல் கணவருடன் இருக்கும் போதே தன்னை 2-வது திருமணம் செய்து பண மோசடியில் ஈடுபட்டதாக சின்னத்திரை நடிகை ரிஹானா பேகம் மீது ஒருவர் புகார் அளித்துள்ளார்.
விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை நடிகை ரிஹானா பேகம். இவர் மீது ராஜ் கண்ணன் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் முதல் கணவருடன் இருக்கும் போதே தன்னை 2-வது திருமணம் செய்து ரூ.20 லட்சம் வரை மோசடி செய்ததாகவும் பணத்தை மீட்டு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இருவரையும் நேரில் அழைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். நடிகை ரிஹானா பேகம், பொன்னி தொடரில் நாயகனின் அம்மாவாகவும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்தி பாத்திரத்திலும் நடித்து புகழ் பெற்றவர்.தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகர் திலீப் ராஜ் மாரடைப்பால் மறைவு : கன்னடத் திரையுலகில் சோகம்!
புதன் 13, மே 2026 3:58:15 PM (IST)

சாதி ஆதிக்கம், பண பலத்தை நொறுக்கியுள்ளது தவெக வெற்றி - பா.ரஞ்சித் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 5:05:04 PM (IST)

விசில் ஊதி சூரியனையே அணைத்து புதிய அரசு விடிகிறது! - விஜய்க்கு பார்த்திபன் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 12:33:35 PM (IST)

ஜனநாயகன்' படக் கசிவு விவகாரம்: துணிக்கடை மேலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
வெள்ளி 1, மே 2026 11:04:13 AM (IST)

100 மில்லியன் பார்வையாளர்கள்: யூடியூப்பில் கூலி படத்தின் பவர்ஹவுஸ் பாடல் புதிய சாதனை!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:05:45 PM (IST)

இறுதி கட்டத்தை எட்டிய ஜன நாயகன் சென்சார் பணிகள்: மே 8-ல் ரிலீஸ்? - ரசிகர்கள் உற்சாகம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:03:15 PM (IST)

