» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியில் 8-வது முறை​யாக ஜெர்மனி சாம்பியன்: இந்தியாவுக்கு வெண்கலம்!

வியாழன் 11, டிசம்பர் 2025 12:27:50 PM (IST)



தமிழகத்தில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் ஜெர்மனி 8-வது முறை​யாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது..

14-வது ஆடவருக்​கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை மற்​றும் மதுரை​யில் நடை​பெற்​றது. தொடரின் கடைசி நாளான நேற்று சென்​னை​யில் நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் 7 முறை சாம்​பிய​னான ஜெர்​மனி, ஸ்பெ​யினுடன் பலப்​பரீட்சை நடத்​தி​யது.

இதில் நிர்​ண​யிக்​கப்​பட்ட 60 நிமிடங்​களின் முடி​வில் ஆட்​டம் 1-1 என சமநிலை​யில் இருந்​தது. ஜெர்​மனி அணி தரப்​பில் 26-வது நிமிடத்​தில் ஜஸ்​டஸ் வார்​வெக்​கும், ஸ்பெ​யின் அணி சார்​பில் 33-வது நிமிடத்​தில் நிக்​கோலஸ் முஸ்​டாரோஸும் தலா ஒரு கோல் அடித்​தனர். இந்த இரு கோல்களும் பீல்டு கோலாக அடிக்கப்பட்டிருந்​தது. இதையடுத்து வெற்​றியை தீர்​மானிக்க ஷுட் அவுட் நடத்​தப்​பட்​டது.

இதில் ஜெர்​மனி 3-2 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று 8-வது முறை​யாக சாம்​பியன் பட்​டம் வென்​றது. அந்த அணி 1982, 1985, 1989, 1993, 2009, 2013, 2023 ஆகிய ஆண்​டு​களி​லும் அந்த அணி கோப்​பையை வென்​றிருந்​தது.

ஷுட் அவுட்​டில் ஸ்பெ​யின் அணி தனது கடைசி முயற்​சி​யில் கோல் அடிக்க எளி​தாக கிடைத்த வாய்ப்பை தவற​விட்​டது. ஜெர்​மனி அணி​யின் கோல்​கீப்​பர் தடு​மாறி கீழே விழுந்​தார். ஆனால் இதை ஸ்பெ​யின் வீரர் பிராடோ ஜுவான் பயன்​படுத்​திக் கொள்ளத் தவறி​னார்.

முன்​ன​தாக வெண்​கலப் பதக்​கத்​துக்​கான ஆட்​டத்​தில் இரு முறை சாம்​பியன்​களான இந்​தியா - அர்​ஜெண்​டினா அணி​கள் மோதின. ஆட்​டத்​தின் 3-வது நிமிடத்​தில் அர்​ஜெண்​டினா அணிக்கு பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பு கிடைத்​தது. இதை பயன்​படுத்தி நிக்​கோலஸ் ரோட்​ரிக்ஸ் கோல் அடிக்க அர்​ஜெண்​டினா 1-0 என்ற கோல் கணக்​கில் முன்​னிலை பெற்​றது.

தொடர்ந்து 44-வது நிமிடத்​தில் அர்​ஜெண்​டினா அணி தனது 2-வது கோலை அடித்​தது. அந்த அணி​யின் வீரர் சாண்​டி​யாகோ பெர்​ணான்​டஸ் பீல்டு கோல் அடித்து அசத்​தி​னார். இதனால் அர்​ஜெண்​டினா அணி 2-0 என முன்​னிலை வகித்​தது. கடைசி 11 நிமிடங்​கள் வரை அர்​ஜெண்​டினா அணி ஆதிக்​கம் செலுத்தி வந்​தது.

49-வது நிமிடத்​தில் இந்​திய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்​னர் வாய்ப்பை அங்​கித் பால் கோலாக மாற்​றி​னார். அடுத்த 3-வது நிமிடத்​தில் மன்​மீத் சிங், பெனால்டி கார்​னர் வாய்ப்​பில் கோல் அடிக்க ஆட்​டம் 2-2 என்ற கணக்​கில் சமநிலையை எட்​டியது.

இதன் பின்​னர் இந்​திய அணி வீரர்​கள் மிகுந்த உத்​வேகத்​துடன் விளை​யாடி​னார்​கள். 57-வது நிமிடத்​தில் இந்​திய அணிக்கு பெனால்டி ஸ்டிரோக் கிடைத்​தது. இதில் ஷர்தா திவாரி கோல் அடிக்க இந்​திய அணி 3-2 என்ற கோல் கணக்​கில் முன்​னிலை பெற்​றது. இதைத் தொடர்ந்து 58-வது நிமிடத்​தில் இந்​திய அணிக்கு பெனால்டி கார்​னர் வாய்ப்பு கிடைத்​து.

இதில் அன்​மோல் எக்கா கோல் அடிக்க இந்​திய அணி 4-2 என்ற கோல் கணக்​கில் தனது முன்​னிலையை அதி​கரித்​துக் கொண்​டது. இதன் பின்​னர் இந்​திய அணி டிஃபன்ஸை பலப்​படுத்தி கோல் வாங்​காமல் பார்த்​துக் கொண்​டது.

அதேவேளை​யில் எதிரணிக்கு அழுத்​த​மும் கொடுத்​தது. முடி​வில் இந்​திய அணி 4-2 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று வெண்​கலப் பதக்​கம் வென்​றது. 0-2 என பின்​தங்​கிய நிலை​யில் இருந்து மீண்டு வந்து கடைசி 11 நிமிடங்​களில் இந்​திய அணி 4 கோல்​களை அடித்​து வெற்​றி பெற்​றது பா​ராட்​டும்​ வகை​யில்​ இருந்தது.

வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களுக்​கும் தலா ரூ.5 லட்​சம் பரிசுத்​தொகை வழங்​கப்​படும் எனவும், பயிற்​சி​யாளர்​களுக்கு தலா ரூ.2.50 லட்​சம் வழங்​கப்​படும் எனவும் ஹாக்கி இந்​தியா அறி​வித்​துள்​ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory