» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 2,095 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.08.2026 முதல் 19.09.2026 வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பணி நிறுவனம்: தமிழ்நாடு அஞ்சல் துறை

காலியிடங்கள்: 2,095

பதவியின் பெயர்: கிராமின் தாக் சேவக் (GDS)

கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு வரை உள்ளூர் மொழியைப் (தமிழ்) படித்திருப்பதுடன், கணினி அறிவு மற்றும் சைக்கிள் ஓட்டும் திறனும் அவசியம்.

வயது வரம்பு: 21.09.2026 அன்றைய நிலவரப்படி 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு).

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு எதுவும் கிடையாது. பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் (Merit List) தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.08.2026 முதல் 19.09.2026 வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய 23.09.2026 மற்றும் 24.09.2026 ஆகிய தேதிகளில் அவகாசம் வழங்கப்படும்.

கூடுதல் விவரங்கள் மற்றும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க https://indiapost.gov.in/gdsonlineengagement என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory