» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் வியாபாரி தீக்குளித்து தற்கொலை முயற்சி!

வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:31:17 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் வியாபாரி ஒருவர் திடீரெனத் தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் கோவில் சண்முக விலாச மண்டபம் முன்பு நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரெனத் தன் உடலில் தீவைத்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியினர் உடனடியாகத் தீயை அணைத்து அவரை மீட்டனர்.

உடலில் பலத்த தீக்காயமடைந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தீக்குளித்தவர் கோவில்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் (38) என்பது தெரியவந்தது.

இவர் கடந்த ஓராண்டாகத் திருச்செந்தூர் கோவில் வளாகப் பகுதியில் தண்ணீர் கேன் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில், அங்குள்ள சிலர் தன்னைத் தாக்கியதால் மனமுடைந்து காணப்பட்ட சுரேஷ், இத்தகைய தீவிர முடிவை எடுத்துத் தற்கொலைக்கு முயன்றதாகக் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இச்சம்பவம் குறித்துத் திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory