» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 5:38:49 PM (IST)
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற 'சாரல் திருவிழா' கலைவாணர் அரங்கில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது.
இவ்விழாவைத் தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சருமான டாக்டர் ராஜீவ் தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார், தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இன்று தொடங்கிய இச்சாரல் திருவிழா தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறவுள்ளது.
சாரல் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக இன்று கடையம் மற்றும் கீழப்பாவூர் வட்டாரப் பள்ளி மாணவ, மாணவிகளின் பல்சுவை கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து கிராமியக் கலைநிகழ்ச்சிகள், பரதநாட்டியம், கரகாட்டம், காவடியாட்டம் மற்றும் மயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை தினமும் பல்வேறு வண்ணமயமான பண்பாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மது முன்பதிவு திட்டத்தை ரத்து செய்ய அரசுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராம்தாஸ் வலியுறுத்தல்
புதன் 5, ஆகஸ்ட் 2026 12:40:29 PM (IST)

பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளிகள் 125 கோடி ஒதுக்கீடு : தமிழக நிதியமைச்சர்
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:54:21 AM (IST)

நல்லா போயிட்டு இருக்கு சார் : முதல்வர் விஜய் உற்சாக பேச்சால் மகிழ்ச்சியான முதல்வர்
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:35:08 AM (IST)

தவெக அரசின் தமிழ்நாடு பட்ஜெட் 2026 : தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்!
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:26:01 AM (IST)

கபினியின் உபரி நீர் வருகையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:06:43 AM (IST)

ஸ்கூட்டரில் சென்றவர் மீது திமுகவினர் சரமாரித் தாக்குதல்: திருநெல்வேலியில் பரபரப்பு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:46:05 PM (IST)


