» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: தூத்துக்குடி அருகே பரபரப்பு!
சனி 25, ஏப்ரல் 2026 9:02:30 AM (IST)

குளத்தூர் அருகே கடற்கரை வழியாக இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,400 கிலோ பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உட்கோட்டம், குளத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கல்லூரணி பகுதியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்குப் பீடி இலைகள் கடத்தப்படவுள்ளதாகக் க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் பேரில், உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர்கள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து மற்றும் காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று அதிகாலை கல்லூரணி கடற்கரைச் சாலையில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.அப்போது கல்லூரணி கடற்கரைக்குச் செல்லும் வழியில் மறைவான ஓரிடத்தில் ஏராளமான மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
சோதனையில், அவை ஒவ்வொன்றும் சுமார் 35 கிலோ எடை கொண்ட 40 மூடை பீடி இலைகள் என்பது தெரியவந்தது. இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த 1,400 கிலோ பீடி இலைகளையும் போலீசார் உடனடியாகப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை மூட்டைகள் அனைத்தும் மேல் நடவடிக்கைக்காகச் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இந்தப் பீடி இலைகளைப் பதுக்கி வைத்திருந்த கடத்தல்காரர்கள் யார் என்பது குறித்துக் க்யூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தைகளை அரசியலுக்குப் பயன்படுத்துவதா? த.வெ.க தலைவர் விஜய் மீது விசிக புகார்!
சனி 25, ஏப்ரல் 2026 4:26:08 PM (IST)

அதிமுக கூட்டணிக் கட்சி முகவர்கள் மிகுந்த விழிப்புடன் பணியாற்ற வேண்டும்: இபிஎஸ் வேண்டுகோள்!
சனி 25, ஏப்ரல் 2026 3:36:21 PM (IST)
_1777100644.jpg)
தென் தமிழக கடலோர பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி : ஏப்.30 வரை மழை பெய்ய வாய்ப்பு!
சனி 25, ஏப்ரல் 2026 12:34:37 PM (IST)

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின் கணிப்பு!
சனி 25, ஏப்ரல் 2026 12:15:10 PM (IST)

சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வித் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
சனி 25, ஏப்ரல் 2026 10:44:27 AM (IST)

தூத்துக்குடியில் ஒருவர் கட்டையால் தாக்கி கொலை : மதுபோதையில் நண்பர் வெறிச்செயல்!
சனி 25, ஏப்ரல் 2026 10:21:03 AM (IST)

