» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழர் வாழ்வில் அமைதி, வளம் பெருகட்டும்: சரத்குமார் புத்தாண்டு வாழ்த்து!

திங்கள் 13, ஏப்ரல் 2026 5:05:54 PM (IST)

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் சரத்குமார் தனது நல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தமிழ் ஆண்டின் விசுவாவசு மறைந்து, புதிய ஆண்டான பராபவ ஆண்டு தமிழர்கள் வாழ்வில் புதிய நம்பிக்கைகள், புதிய சாதனைகள் மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு புதிய தொடக்கமாக அமையட்டும். 

தமிழர் பாரம்பரியம், பண்பாடு மற்றும் ஒற்றுமையை உயர்த்திப் பிடிக்கும் இந்த இனிய நாளில், மக்கள் வாழ்வில் அமைதி, ஆரோக்கியம் மற்றும் வளம் பெருகிட மனமார வாழ்த்துகிறேன்.

நல்லாட்சி அமைந்து நமது தமிழ்நாட்டில் தொடர்ந்து வரும் கொலை, கொள்ளை, ஊழல், கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, வளமான வருங்காலம் அமைய ஒன்றிணைந்து செயல்படுவோம். இளம் தலைமுறையின் கனவுகள் நனவாக, விவசாயிகள் வளமாக, தொழிலாளர்கள் நலமாக வாழும் ஒரு தமிழ்நாட்டை உருவாக்குவோம்.

இந்த புத்தாண்டில், இல்லங்கள் தோறும் மகிழ்ச்சியும், உள்ளங்கள் தோறும் நம்பிக்கையும், உத்வேகமும் மலரட்டும். நல்ல முயற்சிக்கான வெற்றி கிடைக்கட்டும். அனைத்து தமிழ் சகோதர, சகோதரிகளுக்கும் என் சார்பாகவும், என் குடும்பத்தின் சார்பாகவும், பாரதிய ஜனதா கட்சியின் சார்பாகவும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory