» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகம் முழுவதும் 22 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா : அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!

புதன் 25, மார்ச் 2026 4:16:52 PM (IST)



தமிழகம் முழுவதும் 22 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தொகுதியில் விடுபட்டவர்களுக்கும் தேர்தலுக்குப் பின் பட்டா வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.

தூத்துக்குடி அண்ணாநகரில் நடைபெற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டு பேசினார். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை தாங்கினார்.

அமைச்சரின் உரையில் "தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழல் உள்ளதால் 42% பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர். திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் மூலம் தமிழகத்தில் 49 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். தமிழில் படித்தால் மட்டுமே அரசு வேலை என்ற சட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார்.

கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், கொரோனா காலத்தில் கடைகளை அடைக்கச் சொல்லி வணிகர்கள் பாதிக்கப்பட்டனர். சாத்தான்குளம் தந்தை-மகன் மரணத்திற்குக் காரணமான காவல்துறையினரின் அராஜகம் அதிமுக ஆட்சியில் உச்சத்தில் இருந்தது. திமுக ஆட்சியில் வணிகர்களின் கோரிக்கையை ஏற்று 24 மணி நேரமும் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கனிமொழி எம்.பி. முன்னெடுப்பில் தமிழக அரசு 600 ஏக்கர் நிலம் வழங்கி தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வரும் 29-ஆம் தேதி முதல் அங்கு இரவு நேர விமானச் சேவை தொடங்கவுள்ளது. தமிழகம் முழுவதும் 22 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தொகுதியில் விடுபட்டவர்களுக்கும் தேர்தலுக்குப் பின் பட்டா வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும் என்று அமைச்சர் கீதா ஜீவன் பேசினார். கூட்டத்தில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory