» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடியில் தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணி அடிக்கல் நாட்டு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:19:09 PM (IST)

பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
திருநெல்வேலி மாவட்டம், பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணிகளுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (04.03.2026) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இதனைத் தொடர்ந்து, பெருமணல் மீனவ கிராமத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு மு. அப்பாவு அவர்கள் பணிகளைத் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிச் சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு அவர்கள் தெரிவித்ததாவது: "மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு, மீனவர்களின் நலனைக் காக்கப் பல்வேறு முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பெருமணல் மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இப்பணிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்தத் தூண்டில் வளைவு நீட்டிப்பு மூலம் கடல் அரிப்பு முற்றிலுமாகத் தடுக்கப்படும். மீன்பிடிப் படகுகளை இயக்குவது எளிதாகும் மற்றும் விபத்துகள் தவிர்க்கப்படும். மீனவர்களின் சமூக-பொருளாதார நிலை உயரும். மீனவர்களின் நலன் கருதி இத்திட்டத்தைத் தந்துள்ள முதலமைச்சர் அவர்களுக்கு மீனவ மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சா. ஞானதிரவியம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் திரு. ராஜத்துரை, அருட்தந்தை பிரபு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு. பாஸ்கர், முக்கியப் பிரமுகர்கள் திரு. ஜோசப் பெல்சி, திரு. அலெக்ஸ் அப்பாவு மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விவசாயிகளின் பிள்ளைகளுக்கு இலவச உயர்கல்வி: : தஞ்சையில் விஜய் அதிரடி வாக்குறுதி
புதன் 4, மார்ச் 2026 5:51:53 PM (IST)

கொக்கிரகுளத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான வண்ண மீன் காட்சியகம் திறப்பு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:38:58 PM (IST)

அரசினர் குழந்தைகள் இல்லத்தில் புதிய கட்டடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
புதன் 4, மார்ச் 2026 5:00:24 PM (IST)

சட்டத்தை நம்பியே வந்துள்ளேன்: அஜித்குமார் கொலை வழக்கில் பேராசிரியை நிகிதா பரபரப்பு பேட்டி
புதன் 4, மார்ச் 2026 4:30:54 PM (IST)

திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்தி பெயர் நீக்கம்: கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே முடிவு
புதன் 4, மார்ச் 2026 4:15:36 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்ச் 6-ல் சனிப்பெயர்ச்சி விழா: பரிகார பூஜைகளுக்கு ஏற்பாடு
புதன் 4, மார்ச் 2026 12:55:26 PM (IST)

