» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தண்டவாளத்தில் சிக்கித் தவித்த பசு, கன்று மீட்பு : போக்குவரத்து காவலருக்கு எஸ்பி பாராட்டு!
திங்கள் 10, நவம்பர் 2025 8:08:40 PM (IST)

தூத்துக்குடியில் ரயில் வரும் நேரத்தில் ரயில் தண்டவாளத்தில் சிக்கித் தவித்த பசு மற்றும் கன்றினை பத்திரமாக மீட்டு அதன் உயிரை காப்பாற்றிய போக்குவரத்து காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடியில் கடந்த 7ஆம் தேதி மாலை இரண்டாம் ரயில்வே கேட்டில் ரயில் இன்ஜின் வருவதற்காக கேட் போடப்பட்டிருந்தது. அப்போது ரயில் தண்டவாளத்தில் பசு மற்றும் அதன் கன்று குட்டி ஒன்று திடீரென வந்து கேட்டிற்குள் நின்று கொண்டது. இதனையடுத்து அங்கு போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் சுப்பையா துரிதமாக செயல்பட்டு அந்தப் பசு மற்றும் கன்றினை கேட்டிற்குள் ஓரமாகப் பிடித்து வைத்து ரயில் இன்ஜின் செல்லும் வரை நிறுத்தி வைத்து பாதுகாத்தார்.
இதை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். மேற்படி பசு மற்றும் கன்றின் உயிரை காத்த தலைமை காவலரின் மனிதாபிமான செயலை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று தலைமை காவலருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித் தாயாரை கைது செய்ய பிடிவாரண்ட்!
சனி 15, நவம்பர் 2025 12:44:52 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலம் : திரளானோர் தரிசனம்!
சனி 15, நவம்பர் 2025 11:51:49 AM (IST)

தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சனி 15, நவம்பர் 2025 11:25:40 AM (IST)

திரைப்பட இயக்குநர் வி. சேகர் மறைவு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
சனி 15, நவம்பர் 2025 11:14:53 AM (IST)

பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிதிஷ்குமார் நிறைவேற்ற வேண்டும் : மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சனி 15, நவம்பர் 2025 10:15:50 AM (IST)

கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 14, நவம்பர் 2025 8:22:34 PM (IST)


.gif)