» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தொழில்வாரியான நலவாரியங்களை பாதுகாக்க சிறப்பு சட்டம்: அமைப்புசாரா தொழிலாளர்கள் கோரிக்கை!
திங்கள் 13, அக்டோபர் 2025 12:12:22 PM (IST)

சட்டமன்றக் கூட்டத்தொடரில் தொழில்வாரியான நலவாரியங்களை பாதுகாக்க, சிறப்பு சட்டம் அல்லது சிறப்புக் கொள்கை வகுக்க வேண்டும் என்று அமைப்புசாரா தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "மத்திய அரசின் 44 தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்து, கொண்டு வரப்பட்ட 4 தொகுப்பு சட்டங்களையும் திரும்ப பெற்று ஏற்கனவே இருந்த கட்டுமான, பீடி, தோட்டங்கள் போன்ற தொழிலாளர்களுக்கான துறை வாரியான சட்டங்கள் மீட்கப்பட வேண்டும்.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர் சட்டம் 1982யும் அதன் கீழ் இயங்கும் 18 நலவாரியங்களையும், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் மற்றும் விவசாயிகள் நல சட்டம் 2007 - விவசாயத் தொழிலாளர் நலவாரியம், தமிழ்நாடு மீன் மற்றும் மீன் சார்பு தொழிலாளர் நல சட்டம் 2007 மீனவர் நலவாரியம், மற்றும் பிற துறைகளில் இயங்கும் கலைஞர் தொடங்கிய 36 நலவாரியங்களையும் பாதுகாக்கும் அறிக்கையை தீர்மனமாக நிறைவேற்ற வேண்டும்.
வீட்டுவேலை, பொது வளங்களில் பணியாற்றுவோர், விவசாய தொழிலாளர்கள், இல்லங்களில் இருந்து பணிபுரிபவர் தவிர பொதுவான அமைப்புசாரா தொழிலாளர்கள் என 5 புதிய மத்திய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். தொழிலாளர் துறை இதர துறைகளிலும் இயங்கும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நலவாரியங்களுக்கும் ஜீஎஸ்டியில் (GST) ஒரு சதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மத்திய மாநில பட்ஜெட்களில் 3% அமைப்புசாரா தொழிலாளர் சமூகப் பாதுகாப்புக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆ) கட்டுமான தொழிலாளர் நலவாரியத்திற்கு 1 -2 சதம் லெவி, ஓட்டுனர் நலவாரியத்திற்கு சாலை வரியில் 1 சதம், வீட்டுவேலை தொழிலாளர்களுக்கு வீட்டுவரியில் 1 சதம் என ஒவ்வொரு வகை தொழிலாளிக்கும் லெவி முறை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் ரூ.80 இலட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா!
திங்கள் 13, அக்டோபர் 2025 4:10:26 PM (IST)

தூத்துக்குடியில் அக்.16ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
திங்கள் 13, அக்டோபர் 2025 3:32:44 PM (IST)

இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை : நெல்லையில் சோகம்!
திங்கள் 13, அக்டோபர் 2025 3:27:46 PM (IST)

ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி : மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பரபரப்பு
திங்கள் 13, அக்டோபர் 2025 3:13:31 PM (IST)

தேசிய தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்: ஆட்சியர் சுகுமார் துவக்கி வைத்தார்
திங்கள் 13, அக்டோபர் 2025 11:10:28 AM (IST)

சமூக, சாதிய அடையாள பெயர்களை மாற்றுவதில் அரசு அவசரம் காட்டக்கூடாது: ராமதாஸ்
திங்கள் 13, அக்டோபர் 2025 11:08:23 AM (IST)
