» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக காவல்துறையில் 3665 பணி இடங்கள் : செப்.21 வரை விண்ணப்பிக்கலாம்..!

வெள்ளி 19, செப்டம்பர் 2025 12:55:39 PM (IST)

தமிழ்நாடு காவல்துறையில் காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களுக்கு செப்.21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

i) காவல்துறை- இரண்டாம் நிலை காவலர்- ஆண்கள், பெண்கள் உள்பட 2833 பேர்.

ii) சிறை மற்றும் சீர்திருத்தத்துறை- இரண்டாம் நிலை சிறைக் காவலர்: மொத்த இடங்கள்: 180. ஆண்கள்-142, பெண்கள்-38.

iii) தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை: ஆண்கள்- 631 இடங்கள்.

தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி பொதுப் பிரிவினர் 18 லிருந்து 26 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற்பட்டோர்/முஸ்லிம்/மிகவும் பிற்பட்டோருக்கு 2 வருடங்களும், எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மூன்றாம் பாலினத்தவர்கள் 31 வயது வரையிலும், ஆதரவற்ற விதவைகள் 37 வயது வரையிலும், முன்னாள் ராணுவத்தினர் 47 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ.18,200- ரூ.67,100.

உடற்தகுதி: குறைந்தபட்சம் ஆண்கள் 170 செ.மீ., உயரமும், பெண்கள் 159 செ.மீ., உயரமும் இருக்க வேண்டும். (எஸ்சி/எஸ்டி- ஆண்கள் 167 செ.மீ., பெண்கள்- 157 செ.மீ). மார்பளவு (ஆண்கள் மட்டும்) சாதாரண நிலையில் 81 செ.மீ., அகலம், விரிவடைந்த நிலையில் 86 செ.மீ., அகலம் இருக்க வேண்டும்.

உடற்திறன் தகுதி: ஆண்கள் 1500 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். பெண்கள் 400 மீட்டர் தூரத்தை 2½ நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். மேலும் கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு 2 பிரிவுகளை கொண்டது. பிரிவு-1ல் தமிழ்மொழி தகுதித் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். பிரிவு-2ல் பொது அறிவு கேள்விகளுடன் 70 மதிப்பெண்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வு நடத்தப்படும். தமிழ் மொழி தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 32 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே முதன்மை தேர்வு விடைத்தாள் திருத்தப்படும்.

தேர்வு வரும் நவம்பர் மாதம் 09 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்வர்கள் தேர்வு அறிவிப்பினை https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

உடற்தகுதி தேர்வில் விண்ணப்பதாரர்கள் உயரம், மார்பளவு (ஆண்களுக்கு மட்டும்) ஆகியவை பரிசோதிக்கப்படும். உடற்தகுதி தேர்வில் விண்ணப்பதாரர் ஓடுதல், கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். இறுதியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.

கட்டணம்: ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.09.2025.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory