» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தென்காசி தொகுதியில் பிற்பகல் 3மணி வரை 50.71 சதவீத வாக்குப்பதிவு
வெள்ளி 19, ஏப்ரல் 2024 5:03:24 PM (IST)
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் இன்று பிற்பகல் 3 மணி வரை 50.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பாஜக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் இசை தமிழ்வாணன் உள்ளிட்ட 15 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர்.
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் இன்று பிற்பகல் 3 மணி வரை 50.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தென்காசி சட்டமன்ற தொகுதியில் 50.56 சதவீதமும், கடையநல்லூர் தொகுதியில் 49.19 சதவீதமும், வாசுதேவ நல்லூர் தொகுதியில் 48.61 சதவீதமும், சங்கரன்கோவில் தொகுதி யில் 47.96 சதவீதமும், ராஜபாளையம் தொகுதியில் 53.82 சதவீதமும், ஸ்ரீவில்லி புத்தூர் தொகுதியில் 54.75 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன.