» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பதிவேற்றும் பணி: ஆட்சியர் ஆய்வு
புதன் 10, ஏப்ரல் 2024 4:10:35 PM (IST)
தென்காசி தொகுதியில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பதிவேற்றம் செய்யும் பணியினை ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் ஆய்வு செய்தார்.
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தென்காசி பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கடையநல்லூர் தாலுகா அலுவலகங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது.
தொகுதியில் போட்டியிடும் 15 வேட்பாளர்களின் பெயர்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் மற்றும் நோட்டா ஆகியவை பதிவேற்றும் பணி நடைபெற்றது. இப்பணியை தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.