» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல்கள் கசிவுப் புகார்: இந்திய அணுசக்தி கழகம் மறுப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 3:55:08 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக வெளியான தகவல்களை இந்திய அணுசக்தி கழகம் (NPCIL) மறுத்துள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அலகுகள் இங்கு செயல்பாட்டில் உள்ள நிலையில், மேலும் நான்கு அலகுகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இச்சூழ்நிலையில், 'வேர்ல்டு லீக்ஸ்' என்ற இணைய ஊடுருவலாளர் (Hacker) குழு, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் வரைபடங்கள் மற்றும் உதிரிபாகங்கள் விநியோகிப்பாளர் விபரங்கள் அடங்கிய ஆவணங்களைப் பொதுவெளியில் வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்தது.
இந்தத் தரவுக் கசிவுப் புகாரைத் தேசிய அணுசக்தி ஆணையம் மற்றும் NPCIL நிர்வாகம் ஆகியவை மறுத்துள்ளன. இது தொடர்பாக மூத்த அணுசக்தி விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், அணுமின் நிலையத்தின் கணினித் தரவுக் கசிவுப் புகாருக்கும், அணுசக்தி பாதுகாப்பு உள்கட்டமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், NPCIL நிர்வாக இயக்குநர் ராஜேஷ் வெளியிட்டுள்ள விளக்கத்தில், அணுமின் நிலையத்தின் பாதுகாப்புத் தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை என்றும், அணு பாதுகாப்பு தொடர்பான ரகசியத் தரவுகள் எதுவும் வெளியேறவில்லை என்றும், முக்கியத் தகவல்கள் கசிந்ததாகக் கூறப்படும் செய்திகள் உண்மையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை - கன்னியாகுமரி புல்லட் ரயில் திட்டம்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!
வியாழன் 16, ஜூலை 2026 4:59:47 PM (IST)

சபரிவர்மன் கொலை வழக்கு: தென் தாமரைக்குளம் எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 16, ஜூலை 2026 4:24:17 PM (IST)

விசாரணைக் கைதி சபரிவர்மன் கொலை வழக்கு: கட்டி வைத்துத் தாக்கிய 8 கைதிகள் கைது!
வியாழன் 16, ஜூலை 2026 11:17:46 AM (IST)

ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பணி: ஜூலை 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!
வியாழன் 16, ஜூலை 2026 11:15:38 AM (IST)

கன்னியாகுமரியில் காமராஜர் 124-ஆவது பிறந்தநாள் விழா: அமைச்சர் செ.ராஜேஷ் குமார் மரியாதை!
புதன் 15, ஜூலை 2026 4:30:22 PM (IST)

நாகர்கோவில் சிறை மரண வழக்கு: தலைமைக் காவலர் உட்பட 3பேர் கைது - பணியிடை நீக்கம்!
புதன் 15, ஜூலை 2026 11:35:33 AM (IST)


