» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தாயின் உடல்நிலையால் கவலை: மகன் தற்கொலை!
வியாழன் 2, ஜூலை 2026 4:32:34 PM (IST)
தூத்துக்குடியில் தாய்க்கு புற்றுநோய் பாதிப்பால் மனமுடைந்த மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தூத்துக்குடி அண்ணா நகர் 9-ஆவது தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் வெங்கடேசன் குருசாமி (39). திருமணமாகாத இவர், சாலையில் குப்பைகளைச் சுத்தம் செய்யும் வாகனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது தாய் ராமலட்சுமிக்கு (52) புற்றுநோய் பாதிப்பு இருந்ததால், வரும் ஜூலை 12-ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட இருந்தது. இதனால் வெங்கடேசன் குருசாமி கடந்த சில நாட்களாகக் கடுமையான சோகத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், இன்று வழக்கம் போல் வேலைக்குச் செல்லாமல் வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அவரது அண்ணன் கோபாலகிருஷ்ணன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வெங்கடேசன் குருசாமி வீட்டின் மரக்கட்டையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த தென்பாகம் போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் : ரூ.2.79 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள்
திங்கள் 6, ஜூலை 2026 5:51:33 PM (IST)

கன்னியாகுமரி புதிய டிஎஸ்பி பிரகாஷ் பொறுப்பேற்பு!
திங்கள் 6, ஜூலை 2026 3:48:24 PM (IST)

சின்னமுட்டம் துறைமுகத்தில் மீனவர்களிடையே பயங்கர மோதல்: கல்வீச்சு தாக்குதலில் 5பேர் காயம்!
திங்கள் 6, ஜூலை 2026 12:01:28 PM (IST)

மீன்பிடி வலையில் சிக்கிய 7 அடி நீள மலைப்பாம்பு: பெரியகுளத்தில் பரபரப்பு!
ஞாயிறு 5, ஜூலை 2026 1:59:24 PM (IST)

அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் : குமரி - கேரள எல்லைப் பகுதியில் பரபரப்பு!
சனி 4, ஜூலை 2026 5:54:47 PM (IST)

அணுக்கனிம அரசாணை ரத்து: முதல்வர் விஜய்யிடம் அமைச்சர் செ.ராஜேஷ்குமார் கோரிக்கை!
வெள்ளி 3, ஜூலை 2026 10:44:23 AM (IST)



நீJul 5, 2026 - 01:49:31 PM | Posted IP 104.2*****