» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சென்னை டூ நாகர்கோவில் நாளை சிறப்பு ரயில் இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

செவ்வாய் 21, ஏப்ரல் 2026 10:35:28 AM (IST)

சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. 

சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு நாளை சிறப்பு ரயில் (வண்டி எண்: 06072) அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 22 ஆம் தேதி (நாளை) பிற்பகல் 01.25 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம் வழியாக திருச்சிக்கு இரவு 07.35 மணிக்கு வந்து சேரும்.

திருச்சியில் இருந்து 07.45 மணிக்கு கிளம்பும் ரயில் திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சத்தூர், கோவில் பட்டி, நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு 23 ஆம் தேதி அதிகாலை 02.30 மணிக்கு வந்து சேரும். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தொடங்குகிறது. வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory