» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
காதலி பேசாததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை: மார்த்தாண்டம் அருகே சோகம்
திங்கள் 6, ஏப்ரல் 2026 4:22:09 PM (IST)
மார்த்தாண்டம் அருகே காதலி பேசாத காரணத்தால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அடுத்த காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன். இவரது மகன் அபி (23). 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர், கேரளா மாநிலத்தில் தேன் பெட்டி தொழில் செய்து வந்தார். தற்போது ஈஸ்டர் விடுமுறைக்காகச் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
ஊருக்கு வந்த நாள் முதல் அபி யாரிடமும் பேசாமல் மௌனமாக இருந்து வந்துள்ளார். விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்ததாகவும், சமீபகாலமாக அந்தப் பெண் அவரிடம் பேசுவதைத் தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அபி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் வீட்டிற்கு வந்த அபி, உணவு சாப்பிட மறுத்துவிட்டுத் தனது அறைக்குச் சென்றுள்ளார். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது அபி மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்த நிலையில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேச்சிப்பாறை போலீசார், அபியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் : ரூ.2.79 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள்
திங்கள் 6, ஜூலை 2026 5:51:33 PM (IST)

கன்னியாகுமரி புதிய டிஎஸ்பி பிரகாஷ் பொறுப்பேற்பு!
திங்கள் 6, ஜூலை 2026 3:48:24 PM (IST)

சின்னமுட்டம் துறைமுகத்தில் மீனவர்களிடையே பயங்கர மோதல்: கல்வீச்சு தாக்குதலில் 5பேர் காயம்!
திங்கள் 6, ஜூலை 2026 12:01:28 PM (IST)

மீன்பிடி வலையில் சிக்கிய 7 அடி நீள மலைப்பாம்பு: பெரியகுளத்தில் பரபரப்பு!
ஞாயிறு 5, ஜூலை 2026 1:59:24 PM (IST)

அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் : குமரி - கேரள எல்லைப் பகுதியில் பரபரப்பு!
சனி 4, ஜூலை 2026 5:54:47 PM (IST)

அணுக்கனிம அரசாணை ரத்து: முதல்வர் விஜய்யிடம் அமைச்சர் செ.ராஜேஷ்குமார் கோரிக்கை!
வெள்ளி 3, ஜூலை 2026 10:44:23 AM (IST)


