» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கோவில், வீடுகளில் திருட்டு: இருவர் கைது!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 10:37:15 AM (IST)
இரணியல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோவில்கள் மற்றும் வீடுகளில் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள பட்டன்விளை பத்திரகாளி அம்மன் கோவில் மற்றும் கண்ணாட்டுவிளை சிவசக்தி கோவில் ஆகியவற்றில் பித்தளை விளக்குகள் மற்றும் பூஜை பாத்திரங்கள் திருடப்பட்டன. மேலும், திங்கள்நகர் பகுதியில் தமிழ்செல்வி என்பவரது வீட்டில் ஒரு பவுன் தங்க நகையும் திருடு போனது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த இரணியல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், அழகன்பாறை பகுதியைச் சேர்ந்த டேவிட்ராஜ் (27) என்பவர் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், திருடிய நகையை ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் (48) என்பவரிடம் கொடுத்து, தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்தது தெரியவந்தது. அவரிடமிருந்த நகை மற்றும் கோவில்களில் திருடப்பட்ட பித்தளைப் பொருட்களைப் போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட டேவிட்ராஜ் மற்றும் ஆனந்தகுமார் ஆகிய இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
செவ்வாய் 7, ஜூலை 2026 4:43:28 PM (IST)

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் ஆய்வு
செவ்வாய் 7, ஜூலை 2026 12:44:21 PM (IST)

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் : ரூ.2.79 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள்
திங்கள் 6, ஜூலை 2026 5:51:33 PM (IST)

கன்னியாகுமரி புதிய டிஎஸ்பி பிரகாஷ் பொறுப்பேற்பு!
திங்கள் 6, ஜூலை 2026 3:48:24 PM (IST)

சின்னமுட்டம் துறைமுகத்தில் மீனவர்களிடையே பயங்கர மோதல்: கல்வீச்சு தாக்குதலில் 5பேர் காயம்!
திங்கள் 6, ஜூலை 2026 12:01:28 PM (IST)

மீன்பிடி வலையில் சிக்கிய 7 அடி நீள மலைப்பாம்பு: பெரியகுளத்தில் பரபரப்பு!
ஞாயிறு 5, ஜூலை 2026 1:59:24 PM (IST)


