» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பச்சிளம் குழந்தையைக் கொன்று முட்புதரில் வீசிய நர்சிங் மாணவி காதலனுடன் கைது: குமரியில் அதிர்ச்சி!

செவ்வாய் 31, மார்ச் 2026 11:27:31 AM (IST)

திருமணத்திற்கு முன்னதாகப் பிறந்த குழந்தையை, காதலனுடன் சேர்ந்து பக்கெட்டில் அடைத்துக் கொன்று முட்புதரில் வீசிய நர்சிங் கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலனைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொற்றையடி அடுத்த கரம்பவிளை பகுதியில் உள்ள முட்புதர் ஒன்றில், பிளாஸ்டிக் பக்கெட் ஒன்றிற்குள் பச்சிளம் குழந்தை ஒன்று இறந்து கிடப்பதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், குழந்தையின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

போலீஸாரின் தீவிர விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. அந்தப் பகுதியைச் சேர்ந்த ரெஜினா (20) என்ற நர்சிங் கல்லூரி மாணவியும், திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியைச் சேர்ந்த முகேஷ் (25) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலால் ரெஜினா கர்ப்பமடைந்துள்ளார். திருமணத்திற்கு முன்பே குழந்தை பிறந்ததால், சமூகப் பழிச்சொல்லுக்கு அஞ்சி இருவரும் சேர்ந்து குழந்தையைக் கொல்லத் திட்டமிட்டுள்ளனர். 

அதன்படி, குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே அதைக் கொன்று, ஒரு பக்கெட்டில் அடைத்து ஆள் நடமாட்டமற்ற முட்புதரில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து, நர்சிங் மாணவி ரெஜினா மற்றும் அவரது காதலன் முகேஷ் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மற்றும் தடையயங்களை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட இருவரும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். பிறந்த சில மணி நேரத்திலேயே பச்சிளம் குழந்தை தாயாலேயே கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

Sex mApr 4, 2026 - 01:32:55 PM | Posted IP 162.1*****

என்பது எதற்கு கொடுக்க பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory