» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதம்: பா.ஜ.க. பிரமுகர்கள் இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு!

ஞாயிறு 22, மார்ச் 2026 8:57:20 AM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பா.ஜ.க. பிரமுகர்கள் இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை, பொன்மாரி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், தெர்மல் நகர் காவல் நிலையம் அருகேயுள்ள பாரதி நகர் அருங்காட்சியகம் முன்பாக வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாகக் காரில் வந்த பா.ஜ.க. பிரமுகர்களான முரளி மற்றும் முருகேசன் ஆகியோரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிக் காரில் கட்சிக் கொடிகளைக் கட்டியிருந்ததோடு, கட்சித் துண்டையும் அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பியபோது, இருவரும் அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும், அந்த நிகழ்வை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் பதிவேற்றியுள்ளனர். அரசு அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்தது மற்றும் விதிகளை மீறியது தொடர்பாகப் பறக்கும் படை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில், தெர்மல் நகர் போலீசார் முரளி மற்றும் முருகேசன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory