» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் 47 ஆண்டுகால ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு : மேயர் அதிரடி ஆய்வு!

திங்கள் 16, பிப்ரவரி 2026 10:43:57 AM (IST)



தூத்துக்குடி மாநகராட்சிக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்டெடுக்க, மேயர் ஜெகன் பெரியசாமி சுவர் ஏறிக் குதித்து ஆய்வு நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் அருகே, மாநகராட்சிக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மேயருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது, கடந்த 47 ஆண்டுகளாக மூன்று தனிநபர்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தது தெரியவந்தது. ஆக்கிரமிப்பாளர்களில் ஒருவர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், மாநகராட்சி ஆவணங்களைச் சரிபார்த்து அந்த இடம் அரசுக்குச் சொந்தமானது என்பதை மேயர் உறுதி செய்தார். ஆக்கிரமிப்புகளை முழுமையாகக் கண்டறிய அவர் சுவர் ஏறிக் குதித்துச் சென்று பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட்டு, அங்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தச் சாலை எட்டயபுரம் சாலை முதல் மீனாட்சிபுரம் வழியாக ஜெயராஜ் சாலை வரை அமையவுள்ளது. மேலும், 3-வது கேட் மேம்பாலத்தின் கீழ் உள்ள பழைய கட்டிட ஆக்கிரமிப்பும் அகற்றப்பட்டு, அங்கு சாலை அமைக்கப்பட உள்ளது.இச்சாலைகள் பயன்பாட்டிற்கு வரும்போது, பொதுமக்கள் மீனாட்சிபுரம் வழியாகப் பழைய பேருந்து நிலையத்தை மிக எளிதாக அடைய முடியும் என்று மேயர் தெரிவித்தார்.

ஆய்வின் போது திமுக வட்டச் செயலாளர்கள் ரவீந்திரன், கதிரேசன், மின்வாரிய தொழிற்சங்கத் தலைவர் பேச்சிமுத்து, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

என்னதுFeb 16, 2026 - 12:45:49 PM | Posted IP 104.2*****

கண்டுபிடிக்க 47 வருசமா ?

தமிழ்ச்செல்வன்Feb 16, 2026 - 12:32:30 PM | Posted IP 172.7*****

அருமை... இதுபோல் ஏராளமான சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது... அனைத்தையும் மீட்க வேண்டும். எந்தெந்த இடங்கள் என்று சொன்னால் செய்வீர்களா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory