» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
234 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் தான் வேட்பாளர் : தூத்துக்குடியில் சபரீசன் வேண்டுகோள்
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 10:20:07 AM (IST)

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே வேட்பாளர் என்பதை மனதில் வைத்து உடன்பிறப்புகள் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என முதலமைச்சரின் மருமகன் சபரீசன் தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார்.
தமிழக முதலமைச்சர் மற்றும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளார். இதற்காக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு ஏற்கனவே அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் 234 தொகுதிகளுக்குமான தேர்தல் பார்வையாளர்களையும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.
தென் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த சபரீசன், தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதியில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: "கழகத் தலைமைக்கும், முதலமைச்சருக்கும் உறுதுணையாக இருந்து கட்சிப் பணிகளைச் செம்மையாகச் செய்ய வேண்டும். அரசின் மக்கள் நலத்திட்டங்களையும், கட்சியின் கொள்கைகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்து வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று நாட்டிற்கே வழிகாட்டியது. அதேபோல், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் 'தளபதி' தான் வேட்பாளர் என்ற எண்ணத்தோடு அனைவரும் ஒற்றுமையுடன் களப்பணியாற்ற வேண்டும். உழைப்புக்கு அங்கீகாரம்: "கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களுக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் அமையும்" என அவர் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன், சண்முகையா மற்றும் ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா, ராமசாமி, சரவணக்குமார், காசிவிஸ்வநாதன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
தமிழ்ச்செல்வன்Feb 12, 2026 - 05:57:33 PM | Posted IP 172.7*****
கனிமொழியை அப்புறப்படுத்தி விட்டு டெல்லியில் இனி சபரீசன்தான் எல்லாம்.... அதற்கான முன்னோட்டம்தான் இது....
அடுத்து தூத்துக்குடியில் சபரீசன் போட்டியிட்டாலும் இடலாம்....
மேலும் தொடரும் செய்திகள்

டிஆர்பி தேர்வில் வெற்றிபெற்ற 35 ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணைகள்: அமைச்சர் வழங்கல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:27:08 PM (IST)

சிவாலய ஓட்டம்: கனிமவள லாரிகளுக்கு 2 நாட்கள் தடை - எஸ்பி ஸ்டாலின் உத்தரவு!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:38:17 PM (IST)

கேரளாவில் முழு அடைப்பு: தமிழகப் பேருந்துகள் எல்லையில் நிறுத்தம் - பொதுமக்கள் அவதி!
வியாழன் 12, பிப்ரவரி 2026 3:12:37 PM (IST)

அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்ற வேண்டும் : பயணிகள் சங்கம் கோரிக்கை!
வியாழன் 12, பிப்ரவரி 2026 12:14:10 PM (IST)

நாகர்கோவில் - பெங்களூர் ரயில் இயக்கி 12 வருடங்கள் நிறைவு :மேலும் ஒரு ரயில் வருமா...?
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:56:53 PM (IST)

டாஸ்மார்க் கதாநாயகர்களை வீட்டுக்கு அனுப்புவோம்: குமரி மாவட்ட பாஜக பரபரப்பு போஸ்டர்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:25:18 PM (IST)


JOSEPHFeb 13, 2026 - 01:33:05 PM | Posted IP 162.1*****