» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் அண்ணா நினைவு தினம் : அமைச்சர் கீதாஜீவன் மரியாதை!

செவ்வாய் 3, பிப்ரவரி 2026 11:07:46 AM (IST)


தூத்துக்குடியில் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. 

தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு, வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் ராஜாஜி பூங்கா முன்பிருந்து துவங்கி பிரதான சாலை வழியாக வந்து காமராஜ் மார்க்கெட் எதிரில் உள்ள அண்ணா சிலையை அடைந்தது. அங்கு அண்ணாவின் திருஉருவ சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், கலை இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவிதா, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண் குமார், மாநகர அயலக அணி அமைப்பாளர் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் விஜயராஜ், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், நிர்மல் ராஜ், பாலகுருசாமி, அன்னலட்சுமி, மாநகர துணை செயலாளர் முருகஇசக்கி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா வட்டச் செயலாளர் கதிரேசன், மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா முருகேசன் சுரேஷ்குமார், வைதேகி, சரண்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 



பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் எதிரே உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் உமரிசங்கர், ராமஜெயம், வக்கீல் செல்வகுமார், வக்கீல் ரகுராமன், ஒன்றியச் செயலாளர்கள் இளையராஜா, ஜெயக்கொடி சிறுபான்மை பிரிவு கேபி ராஜா, ஸ்டாலின், அந்தோணி, தனுஷ் பாலன், நெல்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க. 



அறிஞர் அண்ணா 57வது நினைவு தினத்தை முன்னிட்டு மதிமுக சார்பில் மாநகரசெயலாளர் முருக பூபதி தலைமையில் காய்கறி மார்க்கெட் எதிரே உள்ள அண்ணா திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி, மாநில வெளியிட்டு அணி செயலாளர் நக்கீரன், மாநில தீர்மானக் குழு உறுப்பினர் பேச்சிராஜ், மாநகர அவை தலைவர் பொம்மை, இளைஞரணி செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநகர துணை செயலாளர் முருகேசன், மற்றும் நிர்வாகிகள் சரவணன், முருகேசன், பொய்யாமொழி, குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

ANNAFeb 3, 2026 - 03:52:36 PM | Posted IP 104.2*****

மதிமுக கூட்டம் நிறைய உள்ளது.....TRAFIC JAM....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory