» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
7-வது மாநில நிதிக்குழு மானிய விவரங்கள் பதிவேற்றம்: நிதிக்குழு தலைவர் மு.அலாவுதீன் ஆய்வு
சனி 27, டிசம்பர் 2025 10:40:07 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 7-வது மாநில நிதிக்குழு மானிய விவரங்கள் பதிவேற்றம் தொடர்பாக 7-வது மாநில நிதிக்குழு தலைவர் மு.அலாவுதீன், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. https://www.kumarionline.com/view/31_264241/20251227104007.html
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 7-வது மாநில நிதிக்குழு தலைவர் மு.அலாவுதீன், துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-7-வது மாநில நிதி குழு மானியம் தொடர்பான வினாப்படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை இணையதளத்தில் உள்ளீடு செய்யும் போது பின்வரும் மூன்று நிலைகள் உள்ளன.
அவை Filling and Saving, Submit, Approval ஆகும். மேலும் மாநில நிதிக்குழு மானிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் தகவல்களின் அடிப்படையிலேயே தொடர்ந்து வரும் ஐந்து நிதியாண்டுகளுக்கான மானியம் அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதால் அனைத்து தகவல்களையும் நன்றாக ஆய்வு செய்து உள்ளீடு செய்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள மக்கள்தொகை, வீடுகளின் எண்ணிக்கை மற்றும் சொத்து வரி வசூல், பரப்பளவு உள்ளிட்ட தகவல்கள் 100மூ சரிபார்க்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மற்றும் அனைத்து நகராட்சிகளின் நகர்மன்ற தலைவர்களுக்கு வினாப் படிவத்தினை பூர்த்தி செய்வது தொடர்பாக தகவல் தெரிவிக்க சம்மந்தப்பட்ட ஆணையர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் தரவுகளை உள்ளீடு செய்தல், சரிப்பார்த்தல் மற்றும் ஒப்புதல் செய்தல் பணியினை 09.01.2026-க்குள் முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளில் மேற்படி தரவுகளை உள்ளீடு செய்யும் பணியினை 31.12.2025-க்குள் முடித்திட தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஊராட்சி தொடர்பான தகவல்களை உள்ளீடு செய்யும் பணியினை உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியருக்கான வினாப்படிவத்தில் உள்ள தகவல்களை உள்ளீடு செய்யும் பணியினை திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மைக்கேல் ஆன்றனி பெர்னாண்டோ, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மண்டல துணை இயக்குநர் (நகராட்சி நிர்வாகம்) திருநெல்வேலி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அன்பு, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) பாண்டியராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஊராட்சி செயலர், கன்னியாகுமரி,பத்மனாபபுரம், குளச்சல், கொல்லங்கோடு, குழித்துறை நகராட்சி ஆணையர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் தேர்தல் விழிப்புணர்வு : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 2, ஏப்ரல் 2026 4:32:17 PM (IST)

இருசக்கர வாகனங்கள் மோதல்: பிளஸ்-1 மாணவி உயிரிழப்பு - வாலிபர் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:47:28 AM (IST)

குமரி மாவட்டத்தில் முதல் நாளில் 15 பேர் மனுத் தாக்கல்: பத்மநாபபுரத்தில் மந்தம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:00:24 PM (IST)

பச்சிளம் குழந்தையைக் கொன்று முட்புதரில் வீசிய நர்சிங் மாணவி காதலனுடன் கைது: குமரியில் அதிர்ச்சி!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:27:31 AM (IST)

குமரியில் பறக்கும் படை சோதனை தீவிரம்: செலவின பார்வையாளர் சரண் ஜோஸ் ஆய்வு
செவ்வாய் 31, மார்ச் 2026 10:57:13 AM (IST)

எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தில் திடீர் சோதனை: நாகர்கோவிலில் பரபரப்பு
திங்கள் 30, மார்ச் 2026 9:18:01 AM (IST)

