» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தில் திடீர் சோதனை: நாகர்கோவிலில் பரபரப்பு
திங்கள் 30, மார்ச் 2026 9:18:01 AM (IST)

நாகர்கோவிலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமியின் பிரச்சார வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தனர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் மாநிலம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனம் நேற்று அதிரடி சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக வந்திருந்த எடப்பாடி பழனிசாமி, நேற்று மாலை நாகர்கோவிலில் இருந்து ஆரல்வாய்மொழி நோக்கித் தனது பிரசார வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஒழுகுனேசேரி அப்டா மார்க்கெட் மேம்பாலத்தின் கீழ் வாகனம் வந்தபோது, கூட்டுறவு தணிக்கை அலுவலர் ஜெய சுபாஜினி தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகனத்தை மறித்தனர்.
சோதனைக்கு எடப்பாடி பழனிசாமி முழு ஒத்துழைப்பு வழங்கியதைத் தொடர்ந்து, அதிகாரிகள் வாகனத்திலிருந்த பெட்டிகள் மற்றும் பைகளை அணு அணுவாகச் சோதனையிட்டனர். ஒரு கட்டத்தில், வாகனத்தின் பேட்டரி பாக்ஸையும் திறந்து காட்டும்படி அதிகாரிகள் கெடுபிடி காட்டினர்.
பாதுகாவலர்கள் சற்றே தயங்கியபோது, இடைமறித்த எடப்பாடி பழனிசாமி, "பரவாயில்லை, சட்ட விதிகளுக்கு மதிப்பளிப்போம், பேட்டரி பாக்ஸையும் திறந்து காட்டுங்கள்" என உத்தரவிட்டார்.
சுமார் சில நிமிடங்கள் நீடித்த இந்தத் தீவிர சோதனையில் பணம், பரிசுப் பொருட்கள் என எதுவுமே சிக்கவில்லை. மேலும், வாகனத்தில் கட்டப்பட்டிருந்த கட்சி கொடிகளுக்கும் முறையான அனுமதி பெறப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் வாகனத்தைச் செல்ல அனுமதித்தனர்.
முன்னாள் முதல்வரின் வாகனத்திலேயே பேட்டரி பாக்ஸ் வரை திறந்து சோதனை செய்யப்பட்டது அப்பகுதியில் இருந்த தொண்டர்களிடையே சற்றே சலசலப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் அறிவிப்பு: நாகர்கோவில் வழியாக இயக்கம்!
சனி 22, ஆகஸ்ட் 2026 3:42:08 PM (IST)

ஓணம் பண்டிகை எதிரொலி: தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு!
சனி 22, ஆகஸ்ட் 2026 10:55:23 AM (IST)

தேங்காய்பட்டணத்தில் ரூ. 5 கோடியில் புதிய சுற்றுலாத்தளம்: ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 5:09:06 PM (IST)

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் ஆவணி திருவிழா தொடங்கியது: ஆக.31ல் தேரோட்டம்!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 4:27:31 PM (IST)

கனிமவளங்களை ஏற்றி வந்த 5 கனரக லாரிகளை பொதுமக்கள் சிறைபிடிப்பு: போலீசில் ஒப்படைப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 5:16:57 PM (IST)

நர்சிங் மாணவி தற்கொலை விவகாரம்: கல்லூரி முதல்வர் கைது - கல்லூரி விடுமுறை நீட்டிப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 11:53:27 AM (IST)


