» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
உண்டியலை உடைத்தபோது கருவறையில் இருந்து சத்தம் கேட்டதால் கொள்ளையன் ஓட்டம்!!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:30:20 AM (IST)
திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது கருவறையில் இருந்து சத்தம் கேட்டதால் தப்பி ஓடியதாக கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சியில் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த கோவில் குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 12 சிவாலயங்களில் 2-வது சிவாலயமாக விளங்குகிறது. இக்கோவிலில் கடந்த 6-ந் தேதி மாலையில் தலைமை அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி கோவில் நடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை அவர் கோவிலுக்கு வந்தார்.
அப்போது கோவிலில் உள்ள உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. ஆனால் அதில் இருந்த காணிக்கை திருட்டு போகவில்லை. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்போில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலையில் மார்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியில் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவர் மீது சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வெள்ளாங்கோடு சரல் விளையை சேர்ந்த மனோஜ் (வயது 29) என்பதும், திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் உண்டியல் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் கோவில் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்து இரும்பு கம்பியால் உண்டியல் பூட்டை உடைத்துள்ளார்.
அப்போது கருவறை பகுதியில் இருந்து ஏதோ சத்தம் கேட்டதால் பயந்துபோன அவர் காணிக்கை பணத்தை எடுக்காமல் தப்பி ஓடியதாகவும், மது குடிக்க பணம் இல்லாததால் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து மனோஜை போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேளாங்கண்ணிக்கு கூடுதல் இரயில்களை இயக்க வேண்டும்: குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!
புதன் 15, ஏப்ரல் 2026 3:54:55 PM (IST)

குளச்சலில் திமிங்கலப் புள்ளி சுறா கரை ஒதுங்கியது: மீன்வளத் துறையினர் ஆய்வு
புதன் 15, ஏப்ரல் 2026 3:43:00 PM (IST)

குமரி மாவட்டத்தில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி தீவிரம்: ஆட்சியர் ஆய்வு
புதன் 15, ஏப்ரல் 2026 10:54:53 AM (IST)

பிரதமர் மோடி நாளை நாகர்கோவில் வருகை : போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 10:33:18 AM (IST)

மீனவர் நலநிதி ரூ.20,000-ஆக உயர்த்தப்படும் : குமரி பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய் உறுதி!
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:04:49 PM (IST)

இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை: மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 11, ஏப்ரல் 2026 5:05:18 PM (IST)

