» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவிலில் சுதந்திரப் போராட்ட வீரர் பொன்னப்ப நாடார் திருவுருவச் சிலை: முதல்வர் திறந்து வைத்தார்!
புதன் 25, பிப்ரவரி 2026 4:00:18 PM (IST)

நாகர்கோவிலில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் பொன்னப்ப நாடார் திருவுருவச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நகரில் சுதந்திரப் போராட்ட வீரர் குமரிக் கோமேதகம் ஆர். பொன்னப்ப நாடார் அவர்களுக்கு ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் விடுதலைக்காகவும், சமூக நீதிக்காகவும் பாடுபட்ட தியாகிகள் மற்றும் சான்றோர்களைப் பெருமைப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு நினைவுச் சின்னங்களை அமைத்து வருகிறது. அந்த வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2025-26ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், ஆர். பொன்னப்ப நாடார் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி அவருக்குச் சிலை நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டது.
கன்னியாகுமரியைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கான போராட்டத்தில் மார்ஷல் நேசமணியின் போர்ப்படைத் தளபதியாக விளங்கியவர். திருவிதாங்கூர் - கொச்சி சட்டமன்றப் பேரவைக்கு இருமுறையும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு மூன்று முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றி, ஏழை எளிய மக்களின் குரலாக ஒலித்தவர்.
இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார்,பிரின்ஸ், தாரகை கத்பட், உணவு ஆணையத் தலைவர் சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மேயர் ஆர். மகேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், பொன்னப்ப நாடார் குடும்பத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்!
வியாழன் 28, மே 2026 8:29:39 PM (IST)

நாகர்கோவில் – கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதல் பொதுப்பெட்டி இணைப்பு: தற்காலிக நடவடிக்கை!
வியாழன் 28, மே 2026 8:23:21 PM (IST)

சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதி விபத்து: மாணவி பரிதாப சாவு!
புதன் 27, மே 2026 12:52:57 PM (IST)

வளர்ச்சித்திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் : சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார்
செவ்வாய் 26, மே 2026 12:05:02 PM (IST)

குமரியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: நெல்லையைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கைது!
திங்கள் 25, மே 2026 5:14:10 PM (IST)

குடும்பத் தகராறில் மனைவியைக் குத்திக் கொன்று கணவன் தற்கொலை: மகன் கண்முன்னே கொடூரம்!
திங்கள் 25, மே 2026 5:00:14 PM (IST)


