» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவிலில் சுதந்திரப் போராட்ட வீரர் பொன்னப்ப நாடார் திருவுருவச் சிலை: முதல்வர் திறந்து வைத்தார்!
புதன் 25, பிப்ரவரி 2026 4:00:18 PM (IST)

நாகர்கோவிலில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் பொன்னப்ப நாடார் திருவுருவச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நகரில் சுதந்திரப் போராட்ட வீரர் குமரிக் கோமேதகம் ஆர். பொன்னப்ப நாடார் அவர்களுக்கு ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் விடுதலைக்காகவும், சமூக நீதிக்காகவும் பாடுபட்ட தியாகிகள் மற்றும் சான்றோர்களைப் பெருமைப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு நினைவுச் சின்னங்களை அமைத்து வருகிறது. அந்த வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2025-26ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், ஆர். பொன்னப்ப நாடார் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி அவருக்குச் சிலை நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டது.
கன்னியாகுமரியைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கான போராட்டத்தில் மார்ஷல் நேசமணியின் போர்ப்படைத் தளபதியாக விளங்கியவர். திருவிதாங்கூர் - கொச்சி சட்டமன்றப் பேரவைக்கு இருமுறையும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு மூன்று முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றி, ஏழை எளிய மக்களின் குரலாக ஒலித்தவர்.
இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார்,பிரின்ஸ், தாரகை கத்பட், உணவு ஆணையத் தலைவர் சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மேயர் ஆர். மகேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், பொன்னப்ப நாடார் குடும்பத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை: மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 11, ஏப்ரல் 2026 5:05:18 PM (IST)

கேரளாவிற்கு கனிமங்கள் கொண்டு செல்லத் தடை: விபத்துக்கள் அதிகரிப்பால் ஆட்சியர் அதிரடி உத்தரவு!
சனி 11, ஏப்ரல் 2026 10:15:37 AM (IST)

தேர்தல் விதிமீறல்களை உடனுக்குடன் தெரிவிக்க உத்தரவு: நுண் பார்வையாளர்களுக்குத் பயிற்சி!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:13:27 PM (IST)

நள்ளிரவில் காய்கறி வியாபாரியின் ஆட்டோ எரிந்து சேதம் - போலீஸ் விசாரணை!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 11:25:27 AM (IST)

பைக் மீது கனிமவள லாரி மோதி விபத்து : தந்தை கண்முன்னே மகள் பலி!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 10:45:04 AM (IST)

நாகர்கோவிலில் ஏப். 15-ல் பிரதமர் மோடி ரோடு ஷோ: நயினார் நாகேந்திரன் தகவல்
வியாழன் 9, ஏப்ரல் 2026 5:32:57 PM (IST)

