» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஒரே நாளில் 8 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது : குமரி மாவட்ட போலீஸ் அதிரடி!
புதன் 8, அக்டோபர் 2025 11:22:05 AM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் எட்டு சரித்திர பதிவேடு ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் குற்றத்தை தடுக்கவும் குற்றம் நடவாமல் காக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, அனைத்து உட்கோட்ட காவல் உதவி மற்றும் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் இன்று மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு ரவுடிகள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெசவாளர் காலனி சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் வருண் (37), கீழ் ஆசாரி பள்ளம் பெஞ்சமின் மகன் கிறிஸ்டோ வினேஷ் (33), அருகுவிளை கடற்கரையாண்டி மகன் லிங்கம் (45), புத்தன் துறை கண்ணுத்துரை மகன் கண்ணன் (38), மேலும் ரஞ்சித் பிரேம், அஜீஸ், பிரசாந்த் ஸ்டாலின் என்ற சாலி ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை மேலும் தீவிரபடுத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உங்க கனவ சொல்லுங்க திட்டத்தில்1057 தன்னார்வலர்கள் தேர்வு: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 9, ஜனவரி 2026 4:52:17 PM (IST)

அனைவரும் சாலைவிதிகளை மதிக்க வேண்டும்: எஸ்பி ஸ்டாலின் வேண்டுகோள்
வெள்ளி 9, ஜனவரி 2026 3:25:46 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
வியாழன் 8, ஜனவரி 2026 3:37:10 PM (IST)

குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 வழங்கும் திட்டம் துவக்கம்
வியாழன் 8, ஜனவரி 2026 12:54:42 PM (IST)

நாகர்கோவில் சந்திப்பில் ரயில் சேவை மாற்றம் : குமரியில் இருந்து ரயில்கள் இயக்கம்!
புதன் 7, ஜனவரி 2026 4:37:07 PM (IST)

சான்றிதழ் வாங்கி வந்த இளைஞர்கள் பஸ் மோதி உயிரிழப்பு - குமரியில் சோகம்!
புதன் 7, ஜனவரி 2026 11:12:54 AM (IST)

