» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஒரே நாளில் 8 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது : குமரி மாவட்ட போலீஸ் அதிரடி!
புதன் 8, அக்டோபர் 2025 11:22:05 AM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் எட்டு சரித்திர பதிவேடு ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் குற்றத்தை தடுக்கவும் குற்றம் நடவாமல் காக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, அனைத்து உட்கோட்ட காவல் உதவி மற்றும் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் இன்று மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு ரவுடிகள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெசவாளர் காலனி சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் வருண் (37), கீழ் ஆசாரி பள்ளம் பெஞ்சமின் மகன் கிறிஸ்டோ வினேஷ் (33), அருகுவிளை கடற்கரையாண்டி மகன் லிங்கம் (45), புத்தன் துறை கண்ணுத்துரை மகன் கண்ணன் (38), மேலும் ரஞ்சித் பிரேம், அஜீஸ், பிரசாந்த் ஸ்டாலின் என்ற சாலி ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை மேலும் தீவிரபடுத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் 9277 மனுக்களுக்கு தீர்வு: ஆட்சியர் தகவல்
வியாழன் 9, அக்டோபர் 2025 5:18:19 PM (IST)

குமரியில் 102 ஆண்டுகளுக்குப் பின் பூத்து குலுங்கும் பனை மரம் : பொதுமக்கள் வியப்பு
வியாழன் 9, அக்டோபர் 2025 10:05:24 AM (IST)

திருடச் சென்ற வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் - வாலிபர் கைது!
செவ்வாய் 7, அக்டோபர் 2025 12:48:02 PM (IST)

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: இலவசமாக மனுக்கள் எழுதிகொடுக்க ஏற்பாடு!
திங்கள் 6, அக்டோபர் 2025 3:32:00 PM (IST)

மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் பார்மசிஸ்ட் உயிரிழப்பு!
திங்கள் 6, அக்டோபர் 2025 12:36:30 PM (IST)

திற்பரப்பு அருவியில் குளித்தபோது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
ஞாயிறு 5, அக்டோபர் 2025 10:02:28 AM (IST)
