» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் 45 தேர்வு மையங்களில் 9,982பேர் குரூப் 2 தேர்வு எழுதினர்!
திங்கள் 29, செப்டம்பர் 2025 10:26:20 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிமைப்பணிகள் தொகுதி - II தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் குருசடி ஹோலி கிராஸ் கல்லூரி மற்றும் நாகர்கோவில் எஸ்.எல்.பி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குடிமைப் பணிகள் தொகுதி II தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி - II பதவிகளுக்கான தேர்வு இன்று நடைபெற்றது. மேற்படி தேர்வில் நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் 45 தேர்வு மையங்களில் 9,982 நபர்கள் தேர்வு எழுதினார்கள்.
தேர்வு நடைபெறும் ஒவ்வொரு மையங்களில் கண்காணிப்பு அலுவலர்கள், பறக்கும் படை அலுவலர்கள், Mobile Unit, ஒவ்வொரு தேர்வு அறைக்கும் ஆய்வு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்வர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று : 700 விசைப்படகுகள் கரைதிரும்பின
புதன் 26, நவம்பர் 2025 3:35:40 PM (IST)

பைக் திருட்டில் ஈடுபட்ட நான்கு இளஞ்சிறார்கள் உட்பட 5பேர் கைது: 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!
புதன் 26, நவம்பர் 2025 11:08:54 AM (IST)

குமரி மாவட்ட ஆட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அதிகாரிகள் போராட்டம்!
செவ்வாய் 25, நவம்பர் 2025 5:23:14 PM (IST)

தமிழ் வழியில் பயின்று அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு காமராஜர் விருது!
செவ்வாய் 25, நவம்பர் 2025 12:26:17 PM (IST)

நியாய விலை கடைகளுக்கு புதிய எந்திரங்கள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா வழங்கினார்!
திங்கள் 24, நவம்பர் 2025 5:01:54 PM (IST)

முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு ஆன்மிகச் சுடர் விருது: பாலபிரஜாதிபதி அடிகளார் வழங்கினார்
திங்கள் 24, நவம்பர் 2025 3:25:54 PM (IST)


.gif)