» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நண்பர்களுடன் ஆற்றில் குளித்த பிளஸ்-1 மாணவன் மரணம் : தக்கலை அருகே சோகம்!
புதன் 24, செப்டம்பர் 2025 5:31:46 PM (IST)
தக்கலை அருகே நண்பர்களுடன் ஆற்றில் குளித்த பிளஸ்-1 மாணவன் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குமரி மாவட்டம் களியக்காவிளையை சேர்ந்தவர் ஷேக்முகம்மது, ஓட்டல் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக தக்கலை அருகே உள்ள சரல்விளையில் வாடகை வீட்டில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவருக்கு தஸ்லீமா என்ற மனைவியும் 2 மகன்களும், ஒரு மகளும் உண்டு. இவர்களில் இளைய மகன் அகமது (16). பிளஸ்-1 படித்து வருகிறார்.நேற்று நேற்று நண்பர்களுடன் வள்ளியற்றில் குளிக்க சென்றபோது ஆற்றில் மயக்கமடைந்துள்ளார். நண்பர்கள் அவரை கரைக்கு கொண்டு வந்து தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் ஆற்றில் குளித்த பிளஸ்-1 மாணவன் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்ட ஆட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அதிகாரிகள் போராட்டம்!
செவ்வாய் 25, நவம்பர் 2025 5:23:14 PM (IST)

தமிழ் வழியில் பயின்று அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு காமராஜர் விருது!
செவ்வாய் 25, நவம்பர் 2025 12:26:17 PM (IST)

நியாய விலை கடைகளுக்கு புதிய எந்திரங்கள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா வழங்கினார்!
திங்கள் 24, நவம்பர் 2025 5:01:54 PM (IST)

முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு ஆன்மிகச் சுடர் விருது: பாலபிரஜாதிபதி அடிகளார் வழங்கினார்
திங்கள் 24, நவம்பர் 2025 3:25:54 PM (IST)

நுள்ளிவிளை ரயில்வே பாலம் இடிக்கும் பணி நிறுத்திவைப்பு: விஜய் வசந்த் எம்.பி. தகவல்
சனி 22, நவம்பர் 2025 12:02:54 PM (IST)

லஞ்சப் புகாரில் சிக்கிய காவல் ஆய்வாளர் அதிரடி இடமாற்றம்: நெல்லை சரக டி.ஐ.ஜி. உத்தரவு!
சனி 22, நவம்பர் 2025 11:27:57 AM (IST)


.gif)