» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நண்பர்களுடன் ஆற்றில் குளித்த பிளஸ்-1 மாணவன் மரணம் : தக்கலை அருகே சோகம்!
புதன் 24, செப்டம்பர் 2025 5:31:46 PM (IST)
தக்கலை அருகே நண்பர்களுடன் ஆற்றில் குளித்த பிளஸ்-1 மாணவன் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குமரி மாவட்டம் களியக்காவிளையை சேர்ந்தவர் ஷேக்முகம்மது, ஓட்டல் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக தக்கலை அருகே உள்ள சரல்விளையில் வாடகை வீட்டில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவருக்கு தஸ்லீமா என்ற மனைவியும் 2 மகன்களும், ஒரு மகளும் உண்டு. இவர்களில் இளைய மகன் அகமது (16). பிளஸ்-1 படித்து வருகிறார்.நேற்று நேற்று நண்பர்களுடன் வள்ளியற்றில் குளிக்க சென்றபோது ஆற்றில் மயக்கமடைந்துள்ளார். நண்பர்கள் அவரை கரைக்கு கொண்டு வந்து தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் ஆற்றில் குளித்த பிளஸ்-1 மாணவன் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில்- நியூ ஜல்பைகுரி அமித் பாரத் ரயில் அறிவிப்பு வழித்தடத்தில் சிறிய மாற்றம் தேவை!
ஞாயிறு 11, ஜனவரி 2026 12:48:03 PM (IST)

உங்க கனவ சொல்லுங்க திட்டத்தில்1057 தன்னார்வலர்கள் தேர்வு: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 9, ஜனவரி 2026 4:52:17 PM (IST)

அனைவரும் சாலைவிதிகளை மதிக்க வேண்டும்: எஸ்பி ஸ்டாலின் வேண்டுகோள்
வெள்ளி 9, ஜனவரி 2026 3:25:46 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
வியாழன் 8, ஜனவரி 2026 3:37:10 PM (IST)

குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 வழங்கும் திட்டம் துவக்கம்
வியாழன் 8, ஜனவரி 2026 12:54:42 PM (IST)

நாகர்கோவில் சந்திப்பில் ரயில் சேவை மாற்றம் : குமரியில் இருந்து ரயில்கள் இயக்கம்!
புதன் 7, ஜனவரி 2026 4:37:07 PM (IST)

