» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி: 2 பெண்கள் உட்பட 3பேர் அதிரடி கைது!
செவ்வாய் 23, செப்டம்பர் 2025 5:50:41 PM (IST)
நீதித்துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 3பேரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்த ஐயப்பன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இவர் தனது இரு மகள்களுக்கும் நீதித் துறையில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியதாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.ஸ்டாலினிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன் பேரில், மாவட்ட குற்றபிரிவு, உதவி ஆய்வாளர் சார்லெட் தலைமையிலான போலீசார் அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரது மனைவி ரம்யா(31) மற்றும் அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்த ஆறுமுகப் பெருமாள் என்பவரது மகன் சுரேஷ்(32) மற்றும் கீழே சரக்கல்விளை பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரது மகள் அனுசியா(35) ஆகியோரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் இவர்கள் பல நபர்களிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்ட ஆட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அதிகாரிகள் போராட்டம்!
செவ்வாய் 25, நவம்பர் 2025 5:23:14 PM (IST)

தமிழ் வழியில் பயின்று அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு காமராஜர் விருது!
செவ்வாய் 25, நவம்பர் 2025 12:26:17 PM (IST)

நியாய விலை கடைகளுக்கு புதிய எந்திரங்கள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா வழங்கினார்!
திங்கள் 24, நவம்பர் 2025 5:01:54 PM (IST)

முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு ஆன்மிகச் சுடர் விருது: பாலபிரஜாதிபதி அடிகளார் வழங்கினார்
திங்கள் 24, நவம்பர் 2025 3:25:54 PM (IST)

நுள்ளிவிளை ரயில்வே பாலம் இடிக்கும் பணி நிறுத்திவைப்பு: விஜய் வசந்த் எம்.பி. தகவல்
சனி 22, நவம்பர் 2025 12:02:54 PM (IST)

லஞ்சப் புகாரில் சிக்கிய காவல் ஆய்வாளர் அதிரடி இடமாற்றம்: நெல்லை சரக டி.ஐ.ஜி. உத்தரவு!
சனி 22, நவம்பர் 2025 11:27:57 AM (IST)


.gif)
vincySep 23, 2025 - 07:42:31 PM | Posted IP 162.1*****