» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

விதிகளை மீறி நம்பர் பிளேட் பொருத்தினால் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!

திங்கள் 22, செப்டம்பர் 2025 10:58:44 AM (IST)



வாகனங்களில் விதிகளை மீறி நம்பர் பிளேட்டுகளை பொருத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குமரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

குமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியில் உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரியான வாகன எண் தகடுகள் இல்லாத வாகனங்கள் மீது சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் சரியான எண் தகடுகள் இல்லாத 51 வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

சரியான வாகன எண் தகடுகள் இல்லாத வாகனங்கள் குற்றங்கள் மற்றும் விபத்துகளில் ஈடுப்பட அதிக வாய்ப்புள்ளதால், பழுதடைந்த எண் தகடுகள் கொண்ட வாகனங்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்குமாறு நாகர்கோவில் உட்கோட்ட காவல் நிலையங்களுக்கு உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் அறிவுறுத்தியுள்ளார். 

திருட்டு வாகனங்கள் அல்லது வேறு ஏதேனும் குற்றங்களில் ஈடுபடும் வாகனங்களை அடையாளம் காண ஸ்மார்ட் காவலர் செயலி மற்றும் வாகன் செயலியிலும் வாகனங்கள் சரிபார்க்கப்பட்டன. மேலும் நாகர்கோவில் உட்கோட்ட பிரிவில் 4 சிறார் ஓட்டுநர் மற்றும் அவர்களின் பெற்றோர் மீதும் வழக்குக் பதிவு செய்யப்பட்டன. இந்த கடுமையான நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தங்கள் திருப்தியையும் பாராட்டையும் தெரிவித்தனர்.
 
ஆய்வாளர் மீனா, காவல் உதவி ஆய்வாளர்கள் சத்திய சோபன், ஸ்டான்லி ஜாண், தலைமை காவலர்கள் உமர் க்ஷெரிப், அகிலன், முதல் நிலை காவலர் அசாருதீன் ஆகியோர் சோதனையில் ஈடுப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory