» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாள் கைமாற்றும் நிகழ்ச்சி: கேரள அமைச்சா் பங்கேற்பு
சனி 20, செப்டம்பர் 2025 4:23:49 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு உடைவாள் கைமாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவிதாங்கூா் மன்னா் ஆட்சியில் பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 1840ஆம் ஆண்டில் சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் இந்த விழா திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. இதில் பங்கேற்கும் வகையில் சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன், பத்மநாபபுரம் தேவாரகட்டு சரஸ்வதி அம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன் ஆகிய விக்கிரகங்கள் ஊா்வலமாக திருவனந்தபுரம் கொண்டுசெல்லப்படும்.
இந்நிலையில், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் நடைபெற உள்ள நவராத்திரி விழாவில் பங்கேற்க இங்கிருந்து சரஸ்வதி அம்மன் உள்ளிட்ட சுவாமி விக்கிரகங்கள் ஆகியவற்றுடன் மன்னர் பயன்படுத்திய உடைவாளை தமிழ்நாடு அரசு கேரளா அரசுக்கு கை மாறுவது வழக்கம். கேரள மாநில அருங்காட்சியக துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் பெற்றுக் கொள்ள தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உடைவாளை கை மாறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்ட ஆட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அதிகாரிகள் போராட்டம்!
செவ்வாய் 25, நவம்பர் 2025 5:23:14 PM (IST)

தமிழ் வழியில் பயின்று அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு காமராஜர் விருது!
செவ்வாய் 25, நவம்பர் 2025 12:26:17 PM (IST)

நியாய விலை கடைகளுக்கு புதிய எந்திரங்கள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா வழங்கினார்!
திங்கள் 24, நவம்பர் 2025 5:01:54 PM (IST)

முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு ஆன்மிகச் சுடர் விருது: பாலபிரஜாதிபதி அடிகளார் வழங்கினார்
திங்கள் 24, நவம்பர் 2025 3:25:54 PM (IST)

நுள்ளிவிளை ரயில்வே பாலம் இடிக்கும் பணி நிறுத்திவைப்பு: விஜய் வசந்த் எம்.பி. தகவல்
சனி 22, நவம்பர் 2025 12:02:54 PM (IST)

லஞ்சப் புகாரில் சிக்கிய காவல் ஆய்வாளர் அதிரடி இடமாற்றம்: நெல்லை சரக டி.ஐ.ஜி. உத்தரவு!
சனி 22, நவம்பர் 2025 11:27:57 AM (IST)


.gif)