» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாள் கைமாற்றும் நிகழ்ச்சி: கேரள அமைச்சா் பங்கேற்பு
சனி 20, செப்டம்பர் 2025 4:23:49 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு உடைவாள் கைமாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவிதாங்கூா் மன்னா் ஆட்சியில் பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 1840ஆம் ஆண்டில் சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் இந்த விழா திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. இதில் பங்கேற்கும் வகையில் சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன், பத்மநாபபுரம் தேவாரகட்டு சரஸ்வதி அம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன் ஆகிய விக்கிரகங்கள் ஊா்வலமாக திருவனந்தபுரம் கொண்டுசெல்லப்படும்.
இந்நிலையில், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் நடைபெற உள்ள நவராத்திரி விழாவில் பங்கேற்க இங்கிருந்து சரஸ்வதி அம்மன் உள்ளிட்ட சுவாமி விக்கிரகங்கள் ஆகியவற்றுடன் மன்னர் பயன்படுத்திய உடைவாளை தமிழ்நாடு அரசு கேரளா அரசுக்கு கை மாறுவது வழக்கம். கேரள மாநில அருங்காட்சியக துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் பெற்றுக் கொள்ள தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உடைவாளை கை மாறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரத்த தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா வேண்டுகோள்
வெள்ளி 10, அக்டோபர் 2025 3:59:36 PM (IST)

திருவட்டாறு கோவில் நகை திருட்டு வழக்கில் மேல் முறையீடு செய்தவர்கள் விடுதலை!
வெள்ளி 10, அக்டோபர் 2025 12:52:50 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் 9277 மனுக்களுக்கு தீர்வு: ஆட்சியர் தகவல்
வியாழன் 9, அக்டோபர் 2025 5:18:19 PM (IST)

குமரியில் 102 ஆண்டுகளுக்குப் பின் பூத்து குலுங்கும் பனை மரம் : பொதுமக்கள் வியப்பு
வியாழன் 9, அக்டோபர் 2025 10:05:24 AM (IST)

ஒரே நாளில் 8 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது : குமரி மாவட்ட போலீஸ் அதிரடி!
புதன் 8, அக்டோபர் 2025 11:22:05 AM (IST)

திருடச் சென்ற வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் - வாலிபர் கைது!
செவ்வாய் 7, அக்டோபர் 2025 12:48:02 PM (IST)
