» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருமண ஆசைகாட்டி ஏமாற்றிய அரசு ஊழியர் : விதவை பெண் விஷம் குடித்து தற்கொலை!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 4:19:24 PM (IST)
குலசேகரம் அருகே திருமண ஆசைகாட்டி அரசு ஊழியர் ஏமாற்றியதால் விதவை பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே கூடை துாக்கியை சேர்ந்தவர் ரமணி 41. இவரது கணவர் இறந்துவிட்டார். 15 வயது மகள் உள்ளார். அவர், நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். குலசேகரம் போலீசார் விசாரித்தனர்.
ரமணி தன் தந்தை ஜார்ஜுக்கு எழுதிய கடிதம் கிடைத்தது. அதில் கூறியிருப்பதாவது: அரசின் கருணை வேலை கேட்டு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தேன். அந்த பிரிவில் பணிபுரியும் ஊழியர், என்னிடம் அன்பாக பேசி திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டினார். இதை நம்பி, அவரிடம் நகை, பணம் கொடுத்தேன். அவர் என்னை ஏமாற்றி, வேறு பெண்ணை திருமணம் செய்தார்.
கேட்டபோது, அவரது உறவினர்கள் அவமானப்படுத்தினர். மனவேதனையில் தற்கொலை செய்கிறேன். அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுங்கள். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். கடிதத்தின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட அரசு ஊழியரிடம் விசாரிக்கின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு: குமரி மாவட்டத்தில் 1500 போலீசார் பாதுகாப்பு - எஸ்பி தகவல்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:30:52 PM (IST)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 12:53:41 PM (IST)

ஒரே நாளில் 13 கனரக டாரஸ் வாகனங்களின் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:32:23 AM (IST)

குமரி மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகள்: சிறப்பு கண்காணிப்பு அலுவலர் விஜய் நெக்ரா ஆய்வு
திங்கள் 22, டிசம்பர் 2025 5:27:18 PM (IST)

நாகர்கோவிலில் புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
திங்கள் 22, டிசம்பர் 2025 4:56:33 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : 335 கோரிக்கை மனுக்கள்!
திங்கள் 22, டிசம்பர் 2025 4:47:24 PM (IST)


.gif)