» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பச்சிளம் குழந்தையின் வாயில் டிஸ்யூ பேப்பரை திணித்து கொலை செய்த கொடூர தாய் கைது!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 4:52:08 PM (IST)
கருங்கல் அருகே பிறந்து 42 நாட்கள் ஆன பெண் குழந்தைக்கு வாயில் 'டிஸ்யூ' பேப்பரை திணித்து கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த பெனிட்டா ஜெயஅன்னாள் (20), மதுரையைச் சேர்ந்த கார்த்திக் (21) இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். பெனிட்டாவுக்கு 43 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. நேற்று வியாழக்கிழமை அதிகாலை சுமார் 3 மணி அளவில் குழந்தை இறந்தது.இது தொடர்பாக கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனையில், குழந்தையை வாயில் டிஸ்யூ பேப்பரை திணித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பெனிட்டா ஜெய அன்னாள் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். குளச்சல் ஏ.எஸ்.பி., ரேகா ஆர். நங்லெட் நேரில் விசாரணை நடத்தினர். தன்னைவிட குழந்தையிடம் கணவர் அதிக பாசம் காட்டியதால் கொன்றதாக பெனிடடா ஜெயஅன்னாள் கூறிய நிலையில், கருங்கல் போலீசார் அவரை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு: குமரி மாவட்டத்தில் 1500 போலீசார் பாதுகாப்பு - எஸ்பி தகவல்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:30:52 PM (IST)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 12:53:41 PM (IST)

ஒரே நாளில் 13 கனரக டாரஸ் வாகனங்களின் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:32:23 AM (IST)

குமரி மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகள்: சிறப்பு கண்காணிப்பு அலுவலர் விஜய் நெக்ரா ஆய்வு
திங்கள் 22, டிசம்பர் 2025 5:27:18 PM (IST)

நாகர்கோவிலில் புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
திங்கள் 22, டிசம்பர் 2025 4:56:33 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : 335 கோரிக்கை மனுக்கள்!
திங்கள் 22, டிசம்பர் 2025 4:47:24 PM (IST)


.gif)