» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய அரசு அனுமதி : தமிழக முதல்வருக்கு கோரிக்கை!!

வெள்ளி 18, ஜூலை 2025 12:22:08 PM (IST)

தமிழகத்தில் நோய் பாதித்த மற்றும் நோய் தொற்றுக்களை பரப்பக்கூடிய தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி கொடுக்க வேண்டும் என்று எம்பவர் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக எம்பவர் இந்தியா நுகர்வோர் & சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ செயலாளர் ஆ. சங்கர் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில், "தமிழகத்தின் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின்படி தமிழ்நாட்டில் 2022 ஆம் ஆண்டில் 3,65,318 நாய்க்கடிகளும், 2023 ம் ஆண்டில் 4,40,921 ஆக உயர்ந்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 1,24,000 நாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளது.

நாய்க்கடிகளின் மூலமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 2017 ல் 16 ஆக இருந்தது. 2024 ல் 47 ஆக உயர்ந்துள்ளது. இதில் 4 வயதுக் குழந்தையும் அடங்கும். ஆகவே தெரு நாய்க்கடி சம்பவங்களால் ரேபிஸ் தொற்று அதிகரித்து வருவதால் கால்நடை மருத்துவர் சான்று பெற்று நோய் பாதித்த மற்றும் நோய் தொற்றுக்களை பரப்பக்கூடிய தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்கு போர்க்கால அடிப்படையில் அதிகாரம் வழங்க தமிழக அரசு ஆணையிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

MAKKALJul 18, 2025 - 01:52:36 PM | Posted IP 162.1*****

தயவுசெய்து கதிர்வேல் நகர், சிவஜோதி நகர் பகுதிகளில் நிறைய சொறி பிடித்த நாய்கள் சுற்றுகிறது. மனிதர்களை இரவு நேரங்களில் விரட்டுகிறது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுங்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory