» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் ஹோட்டல் கழிவு நீர் சாலையில் தேங்கி சுகாதர கேடு: மாணவிகள், பொதுமக்கள் அவதி!
வெள்ளி 18, ஜூலை 2025 10:34:30 AM (IST)

தூத்துக்குடியில் தனியார் ஹோட்டலில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்பதால், பொதுமக்கள், பள்ளி மாணவிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
தூத்துக்குடி விஇ ரோடு, ஸ்மார்ட் சிட்டி சாலையில் சுப்பையா வித்யாலயம் பெண்கள் பள்ளியின் வடக்கு வாசல் அமைந்துள்ளது. இந்த வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். மேலும் ஆட்டோ, சைக்கிளில் ஏராளமானோர் வருகின்றனர். கடந்த சில மாதங்களாக பள்ளியின் எதிரே உள்ள தனியார் ஹோட்டலில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் அந்த பகுதியில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது. மேலும் வாகனங்கள் வேகமாக வரும்போது ஒதுங்க இடமில்லாமல் பள்ளி குழந்தைகள் மீது கழிவு நீர் தெறித்து உடைகள் நாசமாகின்றன. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பேச்சிப்பாறை அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் : ஆட்சியர் திறந்து வைத்தார்!
வெள்ளி 18, ஜூலை 2025 5:27:44 PM (IST)

நாகர்கோவிலில் ஆசிரியர்கள் சாலை மறியல்: பெண்கள் உட்பட100க்கும் மேற்பட்டோர் கைது
வெள்ளி 18, ஜூலை 2025 4:04:20 PM (IST)

பிரதமர் வருகை: சோழமண்டலத்தில் இருந்து ரயில் வருமா? எதிர்பார்ப்பில் குமரி பயணிகள்!
வியாழன் 17, ஜூலை 2025 5:16:18 PM (IST)

பொருட்காட்சியில் நைட்டி அணிந்து குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்: 7பேர் மீது வழக்குப் பதிவு
வியாழன் 17, ஜூலை 2025 5:02:12 PM (IST)

ஜூலை 25ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா தகவல்!
வியாழன் 17, ஜூலை 2025 3:36:16 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவிப்பு
புதன் 16, ஜூலை 2025 11:24:24 AM (IST)

ஏரியா காரன்Jul 18, 2025 - 02:08:52 PM | Posted IP 172.7*****