» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே அறிவிப்பு
வியாழன் 3, ஜூலை 2025 8:52:46 AM (IST)
நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாக மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுரை கோட்ட ரயில்வேக்கு உள்பட்ட மணப்பாறை மற்றும் கொளத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளங்களில் நடந்து வரும் பராமரிப்பு பணி காரணமாக அந்த பாதையில் செல்லும் ஒரு சில ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரையில் இருந்து தெலுங்கானா மாநிலம் கச்சிகுடாவுக்கு புதன்கிழமை தோறும் இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 9,16,30-ஆம் தேதிகளில் மதுரையில் இருந்து காலை 10.40 மணிக்கு பதிலாக மதியம் 12 மணிக்கு புறப்படும்.
அதேபோல, நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாக மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ரயில்கள் (வ.எண்.06029/06030) வருகிற 6-ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து இயக்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)
